Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தற்கொலைப் படை தாக்குதல்.. வங்கதேச விமான நிலையத்தில் பரபரப்பு

வங்கதேச தலைநகர் டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் தற்கொலைபடை தாக்குதல் நடந்தது.

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் தற்கொலைபடை தாக்குதல் நடந்தது. தற்கொலைப்படை தாக்குதலையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகே இன்று இரவு தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.

 suicide attack on police outpost near Dhaka airport

விமான நிலையத்தை நோக்கி வந்த ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி தன்னுடைய உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். இதில், அந்த தீவிரவாதி உடல் சிதறி பலியானார். ஆனால், பொதுமக்கள் தரப்பிலோ போலீஸ் தரப்பிலோ உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலத்த வெடி குண்டு சத்தம் கேட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பாதுகாப்புபடையினர் விரைந்தனர். ராணுவம் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் விமான நிலையத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+