மீண்டும் பள்ளிக்கு போகலாம்.. தாலிபான்கள் அனுமதி.. ஆப்கன் மாணவிகள் செம ஹேப்பி!
காபூல்: ஆப்கானிஸ்தானில் மாணவிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதும் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, வெளியே தனியாக நடமாடக்கூடாது சட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
அதேபோல் தனியார், அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், மதராசாக்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

மாணவர்கள்
இதையடுத்து படிப்புக்காக பல பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர். பெண்களை மீண்டும் கல்வி நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர். கல்லூரி மாணவிகள், சின்ன சின்ன குழந்தைகள் நடத்திய போராட்டம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.

தாலிபான்கள்
தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசுக்கு உலக நாடுகள் தலைமையிலான அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து பெண்களுக்கு எதிரான சில கட்டுபாடுகளைத் தளர்த்தியது தாலிபான் அரசு. தற்போது சில மாகாணங்களில் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கல்லூரிகள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கல்வி நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவிகள் கல்வி பயில எந்த தடையையும் தாலிபான்கள் விதிக்கவில்லை. ஆனால், நாட்டின் பிற மாகாணங்களில் மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல தடை இருக்கிறது. பெரும்பாலான மாகாணங்களில் 7-ம் வகுப்புக்கு மேலே உள்ள வகுப்புகளில் மாணவிகள் வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அனுமதி
இந்நிலையில், வரும் மார்ச் 21ம் தேதிக்கு பின்னர் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தாலிபான் கலாச்சாரத் துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதனால் தாலிபான் மாணவிகள் மீண்டும் பள்ளிக்குப் போகத் தயாராகி வருகிறார்கள். தாலிபான்களின் இந்த முடிவை அனைவரும் வரவேற்றுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications