சிலந்தி குரங்குகிடம் சேட்டை.. சிறுமி பட்டபாடு.. களேபரமான மெக்சிகோ சரணாலயம்!
மெக்சிகோ: வன விலங்குகள் மிகவும் அற்புதமானவை. அதே நேரத்தில் மிகவும் ஆபத்தானவையும் கூட. இப்படியான விலங்குகளை அதன் போக்கில் விட்டுவிடுவதுதான் சிறந்தது. ஆனால் நம்மில் சிலர் உள்ளனர். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக அமைதியாக உள்ள அவைகளை வேண்டுமென்றே வெறுப்பேற்றுவது, செல்ஃபி எடுப்பது, என அதை ஒரு வளர்ப்புப் பிராணியாக கருதி தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி குரங்கு ஒன்றை வெறுப்பேற்றியதால் சிறுமி ஒருவர் பட்டபாடுதான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சிலந்தி குரங்குகள் பொதுவாக தென்னாப்பிரிக்க காடுகள் முதல் மெக்சிகோ வரை பரந்து காணப்படுகிறது. கூட்டு குடும்பமாக வாழும் இந்த குரங்குகள் புத்திசாலித்தனமானவையாகும். பொதுவாக பழங்களை மட்டுமே உணவாக உட்கொள்ளும். சில நேரங்களில் சின்ன சின்ன பூச்சிகளையும் இது தனது உணவு பட்டியலில் சேர்த்துக்கொள்ளும். காடுகளில் மட்டுமே வசிப்பதால் சற்று மூர்க்கமாகவே காணப்படும். எளிதில் பதற்றமுற்று தனது எதிரிகளுடன் சண்டைக்கு செல்லும் குணமுடையது.
இப்படியான குணாதிசயங்களை கொண்ட இந்த குரங்குகள் மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த குரங்குகள் ஒரு நல்ல டைம்பாஸ். வழக்கமாக இப்படியாக நாட்கள் சென்றுகொண்டிருக்கையில் சில தினங்களுக்கு முன்னர் குடும்பம் ஒன்று இந்த சரணாலயத்திற்கு வந்துள்ளது.
குடும்பம் என்றால் குட்டீஸ் இல்லாமையா? ஆக எல்லோருமாக எல்லா விலங்குகளையும் பார்த்துக்கொண்டு வந்துள்ளனர். அப்படியே இந்த சிலந்தி குரங்குகள் அடைக்கப்பட்ட கூண்டு இருக்கும் இடத்திற்கும் வந்துள்ளனர். பெருமக்களெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க குட்டீஸ் எல்லாம் சேட்டையில் இறங்கினர்.
குடும்பத்துடன் வந்த சிறுமி ஒருவர் குரங்கின் அருகில் சென்று சென்போனில் அதை படமெடுக்கத் தொடங்கினார். படமெடுத்தோமா, அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோமா என இல்லாமல் அந்த குரங்கை வம்பிழுத்துள்ளார். நாம்தான் அங்கிருந்து பரினாமமடைந்து வந்துவிட்டோம். ஆனால் குரங்குகள் இன்னமும் குரங்குகளாகவே உள்ளன. அப்படி இருக்கையில் மனிதர்களே இவ்வளவு பண்ணும்போது அது என்ன சும்மாவா இருக்கும்?
ஆமாங்க கையை வெளியில் நீட்டி அந்த சிறுமியின் தலைமுடியை கொத்தாக பிடித்துவிட்டது. அப்புறம் என்ன? சிறுமி கத்த, குரங்கு கத்த அதை பார்த்து சுற்றி இருந்தவங்க கத்த ஒரே கத்தல்தான். ஆனாலும் குரங்கு முடியை விட்டபாடில்லை. குரங்காச்சே சும்மாவா?? பக்கத்திலிருந்த ஒருவர் சட்டையை கழட்டி குரங்கை பயமுறுத்த கடைசியில் அது போய் தொலைங்கடானு விட்டுடுச்சு.
சரி குரங்குதான் விட்டுடுச்சுல்ல நம்ம வழியை பார்த்துட்டு வர வேண்டியதுதானே? அந்த சிறுமி மறுபடியும் குரங்கை நெருங்கியவாறு வேறு பகுதிக்கு போக முயற்சிக்க மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுன கதையா சிறுமியோட முடியை புடிச்சுடுச்சு குரங்கு.
அப்புறம் என்ன? சிறுமி கத்த, குரங்கு கத்த கூட்டம் மட்டும் குபீர்னு சிரிச்சுடுச்சு. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மிருகங்கள் ஆபத்தானவை மக்களே.
பார்ட்டியில் பெரும் பரபரப்பு! நீச்சல் குளத்தில் திடீரென ஏற்பட்ட பெரும் பள்ளம்.. பதற வைக்கும் வீடியோ