அழகிகளுக்கு கொரோனா ... தள்ளிப்போன உலக அழகி போட்டி.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்..
போர்ட்டோ ரிக்கோ: 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ள இருந்த இந்திய அழகி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் போட்டி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.
2020 ஆம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் எனப்படும் உலக அழகிப் போட்டி போர்ட்டோரிக்கோவில் நடைபெறுவதாக இருந்தது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக போட்டி தள்ளி வைக்கப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டியில் கலந்து கொள்ள இருந்த இந்திய அழகியான மானசா வாரணாசி உட்பட பல போட்டியாளர்களுக்கு குறிப்பு அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போட்டியாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வகையில் போட்டி தள்ளி வைக்கப்படுவதாக கூறியுள்ளது.
இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மிஸ் வேர்ல்டு 2021 நிகழ்வை மேற்பார்வையிட பணியமர்த்தப்பட்ட வைரலாஜிஸ்டுகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் போர்ட்டோ ரிகோ சுகாதாரத் துறையுடன் கலந்துரையாடிய பின்னர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் . அடுத்த 90 நாட்களுக்குள் போட்டோ ரிகோ நகரி இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜூலியா மோர்லி கூறுகையில் மிஸ்.வேர்ல்ட் பட்டத்திற்காக போட்டியிட எங்கள் போட்டியாளர்கள் திரும்பி வருவதை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் எனக் கூறியுள்ளார். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள இருந்த மிஸ் இந்திய வேர்ல்டு போட்டியாளரான மானசா வாரணாசிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் போர்ட்டோரிக்கோவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் அழகிப் போட்டியில் இந்திய பிரிவான பெமினா மிஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இறுதிப் போட்டியை நிறுத்திய திருமதி மோர்லிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக மிஸ் இந்திய அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், மிஸ் வேர்ல்டு அணி மற்றும் பிற போட்டியாளர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், மானசா வாரணாசி அபரிமிதமான கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தபோதிலும் அவர் உலக அரங்கை அலங்கரிக்க முடியாமல் போனது சிறிது மன வருத்தத்தை தந்த போதிலும் அவரது பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம் எனவும் போட்டியாளர்கள் ஆரோக்கியத்திற்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக குணமடைய விரும்புகிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications