ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் - வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்த அமெரிக்க பங்குச்சந்தை
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
டவ் ஜோன்ஸின் மதிப்பில் கடும் வீழ்ச்சி
அமெரிக்க தொழில்துறை குறியீடான டவ் ஜோன்ஸின் மதிப்பு திங்கட்கிழமை ஒரேநாளில் மட்டும் 1,175 புள்ளிகளை இழந்துள்ளது. இதன் தாக்கம் ஒட்டுமொத்த அமெரிக்க பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின்போது 777.68 புள்ளிகள் வீழ்ச்சியடைந்ததே மோசமானதாக கருதப்பட்ட சூழ்நிலையில் இப்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கட்டுப்படுத்த வெள்ளைமாளிகை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதிகரிக்கும் அதிபர் மீதான அழுத்தம்
தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா பதவி விலகக்கோரி அதிகரித்து வரும் அழுத்தத்தின் காரணமாக அந்நாட்டை ஆளும் கட்சி தனது உயர்மட்ட குழு வரும் புதன்கிழமை கூடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போதைய அதிபரான ஜுமா மற்றும் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராமபோசா ஆகியோருக்கிடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய "மேலாண்மை மாற்றம்" குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாக ஏஎன்சி கட்சி தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் சென்ற கூகுள்-உபேர் நிறுவனங்கள்
ஓட்டுநரில்லா தானியங்கி கார் துறையில் முன்னணியில் இருக்கும் உபேர் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கிடையேயான வழக்கொன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.
கூகுளின் துணை நிறுவனங்களுள் ஒன்றான வேமோ, உபேர் நிறுவனம் தனது தொழில்நுட்ப ரகசியத்தை திருடியுள்ளதாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டு மீதான விசாரணை சான்பிரான்சிஸ்கோவிலுள்ள நீதிமன்றத்தில் துவங்கியுள்ளது.
நீதிமன்றத்தில் வாய் திறக்க மறுத்த குற்றவாளி
2015 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் எஞ்சியிருக்கும் ஒரே சந்தேகநபர் பெல்ஜிய நீதிமன்றத்தில் பேசுவதற்கு மறுத்துவிட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு குறித்த விசாரணை திங்கட்கிழமை தொடங்கியது.
"என்னுடைய அமைதி என்னை குற்றவாளியாக்காது, அது எனக்கு பாதுகாப்பே" என்று சலாஹ் அப்டேஸ்லாம் நீதிபதிகளிடம் கூறினார்.
பிற செய்திகள்:
- மாலத் தீவில் 'அவசர நிலை': இந்தியர்களுக்கு முக்கிய அறிவுரை
- சீனாவில் 'ராணுவ டாங்கர்' வடிவமைத்தவருக்கு என்ன நேர்ந்தது?
- தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா பதவி விலக மறுப்பு
- ஒற்றுமையை கற்றுத் தரும் ஓர் இஸ்ரேல் கிராமம்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!
















Click it and Unblock the Notifications