5 மாத ஸ்பேஸ் வாழ்க்கை.. பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்.. த்ரில் பயண வீடியோ
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்த்த மூன்று நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர்கள் மூன்று பேர் விண்வெளி ஆராய்ச்சியை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பி இருக்கிறார்கள்.
Recommended Video

நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்த்த மூன்று நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர்கள் மூன்று பேர் விண்வெளி ஆராய்ச்சியை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பி இருக்கிறார்கள்.
இவர்கள் மூவரும் ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள். தற்போது இவர்கள் கஜகஸ்தானில் தரையிறங்கியுள்ளனர்.
இன்று இரவு எல்லோரும் தங்கள் சொந்த நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி தலைமையிடத்திற்கு செல்வார்கள். இவர்கள் செய்த ஆராய்ச்சி குறித்து விவாதம் நடத்தப்படும்.
|
சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன்
விண்வெளியில் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் இருக்கிறது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் வேலை செய்கின்றனர். இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் மூலம் விண்வெளியில் பல ஆராய்ச்சிகள் செய்யப்படும். தொடர்ந்து பல மாதங்களாக தங்கி அவர்கள் ஆராய்ச்சி செய்வது உண்டு.
|
மூன்று நாட்டை சேர்ந்தவர்கள்
தற்போது மூன்று நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர்கள் மூன்று பேர் விண்வெளி ஆராய்ச்சியை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பி இருக்கிறார்கள். இவர்கள் கடந்த 5 மாதமாக விண்வெளி உள்ள ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு சோதனைகள், ஆராய்ச்சிகள் நடத்தி இருக்கிறார்கள். இவர்களின் ஆராய்ச்சி குறித்த முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.
|
யார் இவர்கள்
ரஷ்யாவை சேர்ந்த ஆண்டன் ஷாக்கப்பெர்லோவ், அமெரிக்காவை சேர்ந்த ஸ்காட் டிங்கில், ஜப்பானை சேர்ந்த நொர்ஷிக் கனாய் ஆகியோர் தற்போது ஆராய்ச்சி முடித்து திரும்பியுள்ளனர். 5 மாதம் விண்வெளியில் இருந்ததால் இவர்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். இதனால் இவர்கள் தற்போது மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர்.
|
எப்படி வந்தனர்
இவர்கள் பூமிக்கு திரும்பி வந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. கஜகஸ்தான் பாலைவன பகுதியில் இவர்கள் தரையிறங்கியுள்ளனர். தனிதனி கேப்ஸ்யூல் மூலம் இவர்கள் தரையிறங்கியுள்ளனர். பூமியை நெருங்கும் போது ராட்சச பாராசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளனர். இவர்கள் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications