நிலைமை எவ்வளவு கசப்பானாலும் பரவாயில்லை.. கடைசிவரை சண்டை செய்வோம்.. டிரம்பிற்கு சீனா எச்சரிக்கை
பெய்ஜிங்: நிலைமை எவ்வளவு கசப்பானாலும் பரவாயில்லை.. கடைசிவரை சண்டை செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவிற்கு எதிராக வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இதையடுத்து கடைசிவரை அமெரிக்காவுடன் போராட நாங்கள் தயார். வர்த்தக போரை நடத்த தயாராகி இருக்கிறோம். இந்த வர்த்தக போர்.. அல்லது வரிப்போர்.. அல்லது எந்த விதமான போராக இருந்தாலும் சரி.. அந்த போரை நாங்கள் எதிர்கொள்ள தயார்.

நாங்கள் போரை கடைசிவரை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். நிலைமை எவ்வளவு கசப்பானாலும் பரவாயில்லை.. கடைசிவரை சண்டை செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சீனாவின் வெளியுறவுத்துறை வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிரம்ப் எச்சரிக்கை
இந்தியாவாக இருந்தாலும் சரி.. சீனாவாக இருந்தாலும் சரி.. அவர்கள் மீது பதில் கட்டணங்களை நாங்கள் விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், நாங்கள் விரைவில் பரஸ்பர கட்டணங்களை அறிவிப்போம். ஏனென்றால் அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அவ்வளவுதான்.. விஷயம் மிகவும் எளிமையானது. இந்தியா அல்லது சீனா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி.. நாடு எதுவாக இருந்தாலும், அவர்கள் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம்.. நாங்களும் அதே கட்டணம் வசூலிப்போம்.. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம் அவ்வளவுதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வர்த்தக போர்
சீனாவிற்கு எதிராக அமெரிக்கா இன்று வர்த்தக போரை அறிவித்த நிலையில் அமெரிக்காவின் முடிவிற்கு பதிலடியாக சீனா பதில் வரியை விதித்து உள்ளது. அதன்படி இன்று டிரம்புக்கு பதிலடி கொடுத்தது சீனா. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்திக்கு கூடுதல் 15% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வர்த்தக போரை அதிகாரபூர்வமாக டிரம்ப் தொடங்கி உள்ளார். அதன்படி மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்து அவர் உத்தரவிட்டு உள்ளார்
சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் முதலிடம் வகிக்கின்றன, சீனா அதிகப்பட்சமாக 30.2 சதவிகிதம், மெக்ஸிகோ 19 சதவிகிதம் மற்றும் கனடா 14 சதவிகிதம் வரி பற்றாக்குறையில் பங்கு வகிக்கின்றன.
அமெரிக்காவின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் இந்தியா 3.2 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது. அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் ஒன்பதாவது இடத்தில்தான் இந்தியா உள்ளது. இதனால் அமெரிக்கா கூடுதல் வரி விதித்த நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியா இல்லை. நேற்று இரவு டிரம்ப் போட்ட கையெழுத்தில் இருந்து இந்த புதிய வர்த்தக போர் தொடங்கி உள்ளது.
இனி கனடா, சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இந்த வர்த்தக போருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதில் வரிகளை விதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
சீனா பதிலடி
ஏற்கனவே அமெரிக்க நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி மீது 15% வரியை சீனா விதித்து உள்ளது, அதன் எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் மீது 10% வரியை சீனா விதித்து உள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறையலாம். இதனால் அமெரிக்காவிற்கு கடுமையான இழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
டிரம்ப்பின் செயலால்.. அமெரிக்கா மிகப்பெரிய சிக்கலில் மாட்டி உள்ளது. கிட்டத்தட்ட சர்வதேச அளவில் வர்த்தக போர் மூண்டு உள்ளது. பனிப்போருக்கு பின்பாக மிக மோசமான வர்த்தக போர் ஏற்பட்டு உள்ளது. உலக அளவில் மார்க்கெட்டில் இதனால் பெரிய அளவில் சரிவுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications