பயன்பாட்டுக்கு வருகிறது உலகின் முதல் '3-டி பிரின்டட்' பாலம்!
பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட உலகின் முதல் 3-டி பிரின்டட் பாலம் நெதர்லாந்தில் மக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
நெதர்லாந்து: பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட உலகின் முதல் 3-டி பிரின்டட் பாலம் நெதர்லாந்தில் மக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. 3-டி பிரின்டிங் தொழிநுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் பாலம் இதுவே ஆகும். இந்தப் பாலத்தை சைக்கிள் ஓட்டுபவர்களும், நடந்து செல்பவர்களும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
3-டி பிரிண்டர் தொழிநுட்பத்தை பயன்படுத்தி சமீப காலங்களில் நிறைய பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எந்திர கைகள், மருத்துவ பயன்பாடுகளுக்கான பொருட்கள் என நிறைய சிறிய சிறிய பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது நெதர்லாந்தில் 3-டி பிரின்டிங் தொழிநுட்பம் மூலம் பாலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்று நெதர்லாந்தின் ஜமார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்ட இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 95 சதவிகிதம் 3-டி பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்டது. மீதமுள்ள 5 சதவிகிதம் கான்கிரீட் மூலம் வடிவமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் சிறியதாக இருந்தாலும் இது மிகவும் வலுவானது எனக் கூறப்படுகிறது.
இந்தப் பாலம் 40 டிரக்குகளை ஒரே நேரத்தில் தாங்கக் கூடிய அளவிற்கு வலிமை பொருந்தியது என்று கூறப்படுகிறது. மேலும் இதன் வாழ்நாள் கான்கிரீட்டில் கட்டப்பட்ட பாலங்களைப் போலவே அதிகம் எனவும் கூறுகிறார்கள். இந்தப் பாலம் 800 அடுக்குகளான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தை உருவாக்கிய நெதர்லாந்த் பொறியாளர்கள் குழு செய்தியாளர்களிடம் பேசிய போது "இந்தப் பாலத்தை உருவாக்க மொத்தமாக 3 மாதம்தான் ஆனது. சாதாரண பாலத்தை உருவாக்கும் செலவில் பாதிதான் ஆனது. உலகிலேயே இதுதான் முதல் 3-டி பிரின்டிங் பாலம். இதை வடிவமைத்ததில் எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி'' என்றனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications