ஆர்கே நகரில் டிடிவி தினகரனின் பெற்றது டோக்கன் வெற்றி… தமிழிசை சவுந்திர ராஜன் கிண்டல்
காஞ்சிபுரம்:அதிமுக, பாஜக கூட்டணியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் கூறியிருக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக கூட்டணி மிக பலமான கூட்டணி, நாற்பதும் நமதே என்று செல்லும் அளவிற்கு வெற்றி பெறுவோம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் திட்டலாம்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் இப்படி சொன்னாரு?
விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்
இந்த கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் எங்களது கூட்டணி குறித்து விமர்சனங்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக டிடிவி தினகரன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
டிடிவியின் வெற்றி
மக்களுக்கு எதிரான கூட்டணி கட்சி பாஜக, அதுமட்டுமின்றி மக்கள் விதோத கட்சி பாஜக என்று அவர் கூறி வருகிறார்.டிடிவி தினகரன் தேர்தலில் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்.
தேமுதிக கூட்டணியில் இணையும்
எல்லா தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பான நிலையை மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏற்படுத்தி தருகிறது. தேமுதிகவும் எங்களுடன் இணைய நிறைய வாய்ப்பு உள்ளது.
நட்புக்கட்சி பாமக
பாஜக மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை மட்டுமே அறிவிக்கும். எங்கள் கூட்டணியில் பாமக உள்ளது. அந்த கட்சியுடன் நட்புடன் தான் செயல்படுவோம் என்று கூறினார்.