காரைக்காலில் ஒரே மகிழ்ச்சி.. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு குஷி.. கலெக்டர் சொன்ன இன்ப அதிர்ச்சி
கன்னியாகுமரி: சிவராத்திரியை முன்னிட்டு, காரைக்காலில் இன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி நேற்று கோலாகலமாக தொடங்கியது.. சக்தியை வழிபட நவராத்திரி என்ற ஒன்பது இரவுகள் இருப்பது போல், சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி என்ற தினம், மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

எனவே, இதுபோன்ற சிவராத்திரி நாட்களின்போது, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது வழக்கமான ஐதீகமாக உள்ளது..
சிறப்பு பூஜைகள்: அந்தவகையில் நேற்று அதாவது 8ம் தேதி மாலை 6 மணி தொடங்கி இன்று 9ம் தேதி காலை 6 மணி வரை மகா சிவராத்திரி தினம். சிவராத்திரி தினத்தன்று இரவு கண் விழிப்பது மிக அவசியமானதாக உள்ளது.. விளக்கேற்றுவதும், அபிஷேகப் பொருட்கள் கொடுப்பதும் மிகுந்த புண்ணியத்தை தரும். சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அந்தவகையில், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் பொது விடுமுறையாக அறிவித்துவிட்டன.. இதனால், இந்த மாநிலங்களில், பள்ளிக் கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளன..
விடுமுறை : இன்று இரண்டாவது சனிக்கிழமையும் அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் வருவதால், மார்ச் 2024, மாதம் 8ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இம்மாநிலங்களில் விடுமுறை கிடைத்துள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, சிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டிருந்தார். நேற்றைய தினம் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 2024 மார்ச் நான்காவது சனிக்கிழமை (23.03.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
கருவூலங்கள்: அதே சமயம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள், அரசு ஈடுபாடு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் கலெக்டர் அறிவித்திருந்தார்.
அதுபோலவே, காரைக்காலிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில், மகா சிவராத்திரியையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் இன்று (9ம்தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. மக்களின் கோரிக்கையை ஏற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications