இன்றும் நாளையும் அதி கனமழை.. வெள்ளக்காடான கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றால் அந்த மாவட்டத்தில் கனமழை பெய்து வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வராத வரலாறுகள் இருந்த போதிலும் இந்த முறை வெள்ளம் வந்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள்.

வாழ்வாதாரம்
ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான இடங்களுக்கு பணிச் சென்றவர்கள் திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சொல்லப்பசுகிறது. வாழைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

வேதனை
ஒக்கி புயல் உள்ளிட்ட காலங்களில் கூட இது போல் வெள்ளம் ஏற்படவில்லை என சிலர் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் இன்றும் நாளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில இடங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

செய்திக் குறிப்பு
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும். நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

திருப்பத்தூர்
ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்புத்தூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானம் ஓரளவு மேகமூட்டம்
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருக்கும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுவதால் அந்த பகுதியில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications