பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இளைஞர்.. பெண் குரலில் பேசி வரவழைத்த கணவர்.. வெளுத்த கிராம மக்கள்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இளைஞரை வெளுத்த கிராம மக்கள் -வீடியோ

    பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இளைஞர்.. பெண் குரலில் பேசி வரவழைத்த கணவர்.. வெளுத்த கிராம மக்கள்!

    கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இளைஞரை பெண் குரலிலேயே பேசி வரவழைத்த அவரது கணவர் கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    sexual torture for woman: youth thrashed by village people

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தளவாய் தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவியின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக பேசியும் ஆபாச என.எம்.எஸ் அனுப்பியும் வந்துள்ளார்.

    அந்த பெண் பலமுறை எச்சரித்தும் மர்ம நபர் கண்டுகொள்ளாததால் இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே தனது மனைவியின் செல்போனுக்கு வந்த எண்ணில் தொடர்பு கொண்ட சுப்ரமணியம் பெண் குரலில் பேசி தனது வீட்டிற்கு வருமாறு அந்த நபருக்கு அழைப்பு விடுத்தார்.

    sexual torture for woman: youth thrashed by village people

    இதனை உண்மை என நம்பிய அந்த நபரும் பெண்ணின் வீட்டிற்கு வந்தார். வீட்டில் சுப்ரமணியம் மற்றும் சிலர் இருப்பதை கண்டதும் ஓட்டம் பிடித்த மர்ம நபரை விரட்டி பிடித்த சுப்ரமணியம் மற்றும் பொதுமக்கள் அவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபரின் பெயர் ராம் பிரபு (35 ) என்பதும், இவர் மீது ஏற்கனவே காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து ராம் பிரபுவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+