நாட்டின் அடுத்த பிரதமர்... ஸ்டாலினை கிங் மேக்கராக உருவாக்க வேண்டும் - செந்தில் பாலாஜி
லோக்சபா தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் இந்தியாவில் அடுத்த பிரதமரை உருவாக்க கூடிய சக்தியாக ஸ்டாலினை உருவாக்க வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கரூர்: லோக்சபா தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இந்தியாவில் அடுத்த பிரதமரை உருவாக்க கூடிய சக்தியாக ஸ்டாலினை உருவாக்க வேண்டும் எனவும் தொண்டர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட திமுகவினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட பொறுப்பாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி திமுக தொண்டர்களிடம் பேசினார்.

அப்போது அவர், மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம். வாக்காளர்களின் ஒவ்வொரு கோரிக்கையும் முக்கியம் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். குறிப்பாக புதிய உறுப்பினராக சேர்க்கப்படுவார்கள் யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கக்கூடாது. முழு விருப்பத்தோடு அவர்களை உறுப்பினராக சேர்த்தால் தான் அது திமுகவிற்கு வாக்காக மாறும் என்று கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு லோக்சபா தேர்தல் வர உள்ளது. பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியாவில் அடுத்த பிரதமரை உருவாக்க கூடிய சக்தியாக ஸ்டாலினை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சக்தி வாய்ந்த முதல்வரான மு.க.ஸ்டாலின் என்று சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கூறி அரங்கத்தையே அதிரவைத்தார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலினை கிங் மேக்கராக உருவாக்க வேண்டும் என்று திமுக தொண்டர்களிடம் பேசியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி .












Click it and Unblock the Notifications