'இன்னும் நான்கே மாதம்... கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்படும்'.. அடித்து கூறும் பிரிட்டன்.. எப்படி?
லண்டன்: தடுப்பூசி பணிகள் காரணமாக வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் கொரோனாவில் இல்லாத ஒரு நாடாகப் பிரிட்டன் மாறும் என அந்நாட்டின் தடுப்பூசி டாஸ்ஃபோர்ஸ் தலைவர் கிளைவ் டிக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் தற்போது கொரோனா வைரசின் 2ஆவது, 3ஆவது அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் உருமாறிய கொரோனா வகைகளும் வைரஸ் பரவலின் வேகத்தை அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், தடுப்பூசி மட்டுமே கொரோனாவில் இருந்து மக்களைக் காக்கும் ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் தடுப்பூசி பணிகளை அனைத்து நாடுகளும் தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரிட்டன் தடுப்பூசி பணிகள்
குறிப்பாக மற்ற நாடுகளைக் காட்டிலும் பிரிட்டனில், கொரோனா தடுப்பூசி பணிகள் மிக தீவிரமாக நடத்தப்படுகிறது. பைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு பிரிட்டன் ஆகும். இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதால், வரும் ஜூலை மாத இறுதியில் பிரிட்டன் நாட்டிலுள்ள அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டிருக்கும் என அந்நாட்டின் தடுப்பூசி டாஸ்ஃபோர்ஸ் தலைவர் கிளைவ் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா இல்லாத பிரிட்டன்
பிரிட்டன் நாட்டில் கொரோனா பாதிப்பு என்பது ஆகஸ்ட் மாதத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கும் என்றும் அனைத்து கொரோனா வகைகளுக்கு எதிராகவும் தடுப்பூசி செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சுமார் 6.6 கோடி மக்கள்தொகையைக் கொண்ட பிரிட்டனில் தற்போது வரை 5 கோடி பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பணிகளை விரைவாக முடிப்பதன் மூலம், வரும் ஆகஸ்ட் மாதம் கொரோனா ஆபத்து இல்லாத நாடாகப் பிரிட்டன் மாறும் என கிளைவ் டிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவதாக பூஸ்டர் டோஸ்
40 வயதுக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியால் ரத்த உறைதல் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் இளைஞர்களுக்கு வேறு தடுப்பூசிகளை அளிப்பது குறித்தும் ஆலோசனை செய்து வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், இரண்டு டோஸ்களை தவிர்த்து, மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி டோஸ் செலுத்தும் பணிகளும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

Array
பிரிட்டன் நாட்டில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியது. இதனால் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு இறுதியில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது வைரஸ் பரவலின் வேகத்தைப் பல மடங்கு அதிகரித்தது. இதன் பிறகு, அங்கு மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகப்படுத்தப்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications