இங்கிலாந்தில் டென்ஷன்: மன்னர் சார்லஸ், ராணி கமிலா மீது சரமாரி முட்டை வீச்சு- இளைஞர் கைது
லண்டன்: இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா சார்லஸ் மீது சரமாரியாக முட்டைகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து முட்டை வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இங்கிலாந்தின் மன்னராக பொறுப்பேற்ற சார்லஸ் மற்றும் கமிலா ஆகியோர் யோர்க் நகருக்கு சென்றனர். அங்கு பொதுமக்கள் மன்னருக்கும் ராணிக்கும் உற்சாக வரவேற்பளித்தனர். அந்த மக்களுடன் கலந்துரையாடி வாழ்த்துகளைப் பெற இந்த பயணம் மேற்கொண்டிருந்தார் மன்னர் மூன்றாம் சார்லஸ்.

மக்களுடன் மன்னர் சார்லஸ் உற்சாகமாக கலந்துரையாடி கொண்டிருந்தார். அப்போது சார்லஸ் அருகே ஒரு பொருள் முதலில் விழுந்து தெறித்தது. இதன் பின்னர் சரமாரியாக அந்த பொருட்கள் வீசப்பட்டு உடைந்து சிதறியது. பின்னர்தான் மன்னர் சார்லஸ் மீது சரமாரியாக முட்டைகள் வீசப்பட்டது தெரியவந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அந்த இளைஞரை கைது செய்த போது சில முழக்கங்களை எழுப்பினாராம். அதாவது இங்கிலாந்து அடிமைகளின் ரத்தத்தால் கட்டப்பட்ட தேசம் என விமர்சித்து முழக்கமிட்டாராம் அந்த இளைஞர்.
யோர்க் நகரில் இங்கிலாந்து அரச குடும்பத்தினர் மீது முட்டைகள் வீசப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை முன்வைத்து விவாதங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
🚨 BREAKING NEWS: Egg thrown at “King” Charles during visit to York as man detained by police.
— Terrence Daniels (Captain 🍀 Planet) (@Terrence_STR) November 9, 2022
Protester was arrested while screaming “this country was built on slavery”
The monarchy is a complete yoke at this point 😏 pic.twitter.com/rc5L0Zufmx












Click it and Unblock the Notifications