தாலி கட்ட 5 நிமிஷம் கூட இல்லை! புது காரை ஓட்டி பார்த்த புது மாப்பிள்ளை! அதுக்குள்ள இப்படி ஆயிருச்சே?
லக்னோ : திருமணத்தின் போது தனக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்ட காரை மணமகன் ஓட்டிப் பார்த்தபோது விபத்து ஏற்பட்ட நிலையில் கல்யாண வீடு சிறிது நேரத்திலேயே துக்க வீடாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பார்கள். இரு மனங்கள் மட்டுமல்லாது இரு குடும்பம் ஒரு சமூகம் என பலரையும் இணைக்கும் ஒரு அற்புத பெருவிழா தான் திருமணம்.
இது வீட்டார்கள் படைசூழ மணமகள் கழுத்தில் மணமகன் தாலி அணிவிக்க உதிக்கும் புதிய பந்தமானது தலைமுறை தலைமுறையாக தொடரும்.. திருமணம் என்றாலே மகிழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் அளவே இருக்காது.

திருமண நிகழ்ச்சி
அதே நேரத்தில் சில நேரங்களில் மகிழ்ச்சிக்கும் திடீரென ஒரு தடை வந்து விடுவது உண்டு அப்படி ஒரு நிகழ்வு தான் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்திருக்கிறது. திருமண விழாவின் போது தனக்கு கொடுத்த காரை ஆசையாக ஓட்டிப் பார்க்க முயன்ற போது அது விபத்துக்குள்ளானதில் திருமண வீடு சோகமயமாக மாறி இருக்கிறது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள அக்பர்பூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

கார் வரதட்சணை
திருமணத்தை ஒட்டி மணமகள் மணமகன் வீட்டார் கோலாகலமாக கூடி நின்று மகிழ்ச்சியில் மூழ்கி இருந்தனர். திருமணத்திற்கு முன்னதாக அவர்கள் சமூக வழக்கப்படி மணமகனுக்கு வெற்றி திலகம் விடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மணமகளின் வீட்டார் மணமகனுக்கு வரதட்சணையாக கார் ஒன்றினை பரிசாக வழங்கியிருக்கின்றனர்.

திடீர் விபத்து
ஆனால் மணமகன் அருண்குமாருக்கு காரை ஓட்ட தெரியாது என கூறப்படுகிறது. இருந்த போதும் பெண் வீட்டார் கொடுத்ததால் காரை ஓட்டி பார்க்கலாம் என அமர்ந்த அவர் காரை ஸ்டார்ட் செய்துள்ளார். நண்பர் ஒருவர் உதவிய நிலையில், கியர் போட்ட அவர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென கூட்டத்திற்குள் புகுந்து இருக்கிறது.

சோகமான திருமண வீடு
இந்த விபத்தில் மணமகனான அருண்குமாரின் சொந்த அத்தை ஷர்மிளா தேவி என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கார் தாறுமாறாக ஓடியதில் சிறுமி உட்பட நான்கு பேர் காயம் அடைந்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து அக்பர்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மணமகனே விபத்திற்கு காரணம் என போலீசார் கூறினார். திருமண வீடு சோக வீடாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications