உ.பி. முதல்கட்ட தேர்தலில் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா.. ஹேப்பியாகும் யோகி ஆதித்யநாத்
லக்னோ: ‛‛உத்தர பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தலில் அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளது. மக்கள் பாஜகவுக்கு ஓட்டளித்து இருப்பதை இது காட்டுகிறது''என அம்மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான இங்கு 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பிப்.,10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன.

நான்குமுனை போட்டி
இதனால் நான்கு முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் இழந்த ஆட்சியை கைப்பற்ற அகிலேஷ்யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரசும் மாநிலத்தில் செல்வாக்கை நிரூபிக்க முயற்சித்து வருகிறது.

முதல்கட்ட ஓட்டுப்பதிவு
நேற்று முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. ஷாமிலி, ஹாபூர், கவுதம் புத் நகர், முஸாபர்நகர், மீரட், பாக்பாட், காசியாபாத், புலன்ட்சார், அலிகர், மதுரா, ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் மக்கள் ஓட்டளித்தனர். மொத்தம் 60 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

பாஜகவிற்கு லாபம்
இந்நிலையில் 2ம் கட்ட தேர்தலையொட்டி சந்தாசி பகுதியில் யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: முதற்கட்ட தேர்தலில் அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளது. மக்கள் பாஜகவுக்கு ஓட்டளித்து இருப்பதை இது காட்டுகிறது. மக்கள் எங்கள் கோரிக்கையை ஏற்று பெருமளவிற்கு திரண்டு வந்து ஓட்டுப் போட்டுள்ளனர். பாஜகவிற்கு ஆதரவாக அலை வீசியதை இது காண்பிக்கிறது.

குற்றங்கள் இல்லை
இரட்டை இன்ஜின் வேகத்தில் செயல்படும் பாஜக அரசு, பெண்கள், வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கியதே இதற்கு காரணம். மாநிலத்தில் கலவரம், குற்றங்கள் நடக்கவில்லை. கலவரம், குற்றத்தில் ஈடுபடுவோர் வீடுகளில் முடங்கியுள்ளனர். மார்ச் 11ல் இவர்களுக்கான கவுண்ட்டவுன் துவங்கும் என்பதால் அச்சப்பட்டுள்ளனர்'' என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications