வயநாடு மக்களே.. ராகுலை நம்பாதீங்க.. அமேதியை ஏமாத்திட்டு வர்றாரு.. ஸ்மிருதி
லக்னோ: 15 ஆண்டுகளாக வாக்களித்து எம்பியாக தேர்வு செய்த அமேதி மக்களை ஏமாற்றிவிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது வயநாடு சென்று போட்டியிடுவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதி தான் அமேதி.
இங்கு தான் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர் ஆண்டாண்டு காலமாக போட்டியடுகிறார்கள். கடந்த 2004ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக ராகுல் காந்தி அமேதியில் தான் போட்டியிட்டு மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராகுல் வயநாடு
இந்த முறை கேரள காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று, அமேதி தொகுதியுடன், கேரளாவில் உள்ளவயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இன்று கேரளா சென்ற ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

ஸ்மிருதி போட்டி
இதனிடையே அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்த பாஜக சார்பில் ஸ்மிருதி இராணி இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த முறை எதிர்த்து போட்டியிட்ட இராணி பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். எனினும் இந்த முறை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். இதற்காக மத்திய அரசின் திட்டங்களை சொல்லி வாக்கு கேட்டு வருகிறார்.
உங்களுக்கு அரசியல் தெரியுமா? அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க.. பாஸ் பண்ணிட்டா கெத்துதான்!

ராகுல் மீது தாக்குதல்
இந்யிலையில் ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் செண்ட மேள வரவேற்போடு கேரளாவில் சுற்றும் நிலையில், ஸ்மிருதி இராணி இதுதான் வாய்ப்பு என அங்கு இரண்டு நாள் பயணமாக தீவிரபிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அவர் இன்று அமேதி மக்களிடம் பேசுகையில், இந்தா பாருங்க மக்களே! 15 வருடங்களாக இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக சென்ற ராகுல் காந்தி. இப்போது வேறு தொகுதியில் போட்டியிடுதன் மூலம் உங்களை (அமேதி மக்களை) அவமதித்துவிட்டார். இதை எப்போதும் மறக்க முடியாது.

ஸ்மிருதி எச்சரிக்கை
வயநாடு மக்களே உங்களை எச்சரிக்கிறேன். ராகுல் காந்தி எம்பியாக இருக்க லாயக்கானவரா என்பதை அமேதிக்கு வந்து பாருங்க. இங்க என்ன செய்தாருன்ணு தெரியும். 15 வருஷமா அமேதி மக்களால் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், இப்போது உங்களை ஏமாற்ற வருகிறார். எனவே வயநாடு மக்களே எச்சரிக்கையாக இருங்கள்" இவ்வாறு கூறினார்.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications