இந்தியாவின் சக்தி வளர்ந்து வருவதால்தான் உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க முடிகிறது: மோடி பிரச்சாரம்
லக்னோ: ‛‛இந்தியாவின் சக்தி வளர்ந்து வருவதால் தான் போருக்கு மத்தியில் உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க முடிகிறது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிப்ரவரி 10, 14, 20, 23, 27 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. 6ம் கட்ட தேர்தல் நாளை நடக்கிறது.
அதன்பிறகு 7வது மற்றும் கடைசிகட்ட தேர்தல் மார்ச் 7 ல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நான்கு முனை போட்டி
இந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜக முயற்சிக்கிறது. எதிர்க்கட்சிகளாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மம்தாவின் பகுஜன் சமாஜ், மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகின்றன. பாஜகவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோடி பேச்சு
இந்நிலையில் இன்று உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் செய்தார்.அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்தியாவின் சக்தி வளர்ந்து வருகிறது. இதனால் தான் உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மத்திய அரசால் மீட்க முடிந்தது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் முயற்சியை ஒருபோதும் மத்திய அரசு கைவிடாது. இந்திய ராணுவத்தின் வீரம், மேக் இன் இந்தியா திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பும் நபர்களால் இந்தியாவை வலிமையாக்க முடியாது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

எதிர்க்கட்சிகளுக்கு பதில்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்பதில் இந்தியா தாமதமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி உத்தர பிரதேச பொதுக்கூட்டத்தில் பேசி உள்ளார். முன்னதாக உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பது தொடர்பாக கடந்த மூன்று நாட்களில் நான்கு முறை உயர்மட்ட குழுவை கூட்டி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

மீட்பு பணி விரைவு
உக்ரைனில் தொடர்ச்சியாக நிலைமை மோசமாகி வருவதால் ‛ஆபரேஷன் கங்கா' எனும் இந்தியாவின் மீட்பு நடவடிக்கையும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.மீட்பு பணியில் தனியார் விமானங்களுடன் இந்திய விமானப்படை விமானங்களும் இணைந்துள்ளன. அத்துடன் மீட்பு நடவடிக்கைக்கான ஒருங்கிணைப்பு பணியை மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கிரன் ரிஜூ, விகே சிங் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications