Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை திருமங்கலம் பட்டாசு ஆலை வெடி விபத்து..சிதறிய உடல் பாகங்கள்..6 பேர் பலி - ஆளுநர் ரவி இரங்கல்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக் 6 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி பட்டி அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த வெள்ளைப்பவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு குடோன்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் ஐந்துக்கு மேற்பட்டோர் பலியாகினர்.

ஒருவரது உடல் ஆங்காங்கே தலை, உடல் பகுதி, கால் பகுதி என தென்னந்தோப்பு பகுதிகளில் சிதறி கிடக்கின்றன.
விபத்து நிகழ்ந்த இடம் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. 3 கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது.

 6 பேர் பலி

6 பேர் பலி

இந்த விபத்தில் வடக்கம்பட்டியை சேர்ந்த அம்மாவாசி, வல்லரசு, கோபி, புளியகவுண்டன்பட்டியை சேர்ந்த விக்கி, அழகுசிறையை சேர்ந்த பிரேமலா உயிரிழந்துள்ளனர். ஐந்து பேர் உடல் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதால் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

சிதறிய உடல் பாகங்கள்

சிதறிய உடல் பாகங்கள்

கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமானதில் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

படுகாயங்களுடன் சிகிச்சை

படுகாயங்களுடன் சிகிச்சை

படுகாயமடைந்தவர்கள் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினரும் வருவாய் துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்

ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகவும் ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+