ப.சிதம்பரத்திடம் கடும் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்.. என்ன நடந்தது?
மதுரை: மானாமதுரை அருகே காங்கிரஸ் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் கடும் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் நிர்வாகி கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
மானாமதுரை அருகே வெள்ளிக் குறிச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார்.
இக் கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட செயற்குழு உறுப்பினர், பாண்டி வேலு என்பவர் பேசுகையில்தான் பிரச்சினை ஆரம்பித்தது. அவர் கூறுகையில், மானாமதுரையில் காங்கிரஸ் வளரவில்லை. இதற்கு காரணம் தற்போதுள்ள நிர்வாகிகள்தான். எனவே அவர்களை மாற்ற வேண்டும். இப்போதுள்ள நிர்வாகிகள், பிற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கட்சி கூட்டத்துக்கு கூட அழைப்பதில்லை. பூத் கமிட்டியை முறையாக அமைக்கவில்லை என்று ஆவேசமாக தெரிவித்தார்.

மேடையிலிருந்து இறங்கி வந்த ப சிதம்பரம்
இதையடுத்து அவரைத் தொடர்ந்து பேச அனுமதிக்காமல் தடுத்தனர். இதை கேட்காமல் பாண்டிவேலு தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்தார் ப.சிதம்பரம். சட்டென்று மேடையில் இருந்து இறங்கி வந்தார். பாண்டிவேலுவை மேடையில் ஏறி தனது இருக்கையில் அமர்ந்து பேசுமாறு தெரிவித்தார். தான் பாண்டிவேலு இருக்கையில் அமரப்போவதாக கூறினார்.

வாக்குவாதம்
இதனால் பாண்டிவேலு மேலும் கோபமடைந்தார். நிர்வாகிகள் கருத்துக்களை கேட்க மறுப்பதாக சிதம்பரத்தோடு வாக்குவாதம் செய்தார். அங்கிருந்த கட்சியினர் பாண்டிவேலுவை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பிறகு பேட்டியளித்த பாண்டிவேலு, ப.சிதம்பரம் என்னை பேசக் கூடாது என்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் புகார் தெரிவிப்பேன் என்றார்.

கட்சியிலிருந்து நீக்கம்
இந்த நிலையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு அப்பொறுப்பில் இருந்து நிரந்தரமாகவும், அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து தற்காலிகமாகவும் நீக்கப்பட்டுள்ளார். பாண்டி வேலுவிடம் விளக்கம் கேட்டும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கேள்வி கேட்டு, விமர்சனங்களை முன் வைத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி, கட்சியிலிருந்தே நீக்கப்பட்ட சம்பவம் மானாமதுரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications