மதுரை, குமரியில் நிலைமை மோசம்.. உள் மாவட்டங்களில் அதிகரித்த ஆக்டிவ் கேஸ்கள்.. கலங்கடிக்கும் டேட்டா
சென்னை: தமிழகத்தில் தற்போது சென்னை, செங்கல்பட்டு, கோவை தாண்டி உள் மாவட்டங்களிலும் கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இன்று 30355 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் ஒரே நாளில் பதிவாகி உள்ளது
தமிழகத்தில் இன்று 30355 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1468864 பேர் இதுவரை தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆக்டிவ்
தமிழகத்தில் முக்கியமாக ஆக்டிவ் கேஸ்கள் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஆக்டிவ் கேஸ்களின் சதவிகிதம் 43.4% உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 172735 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு உள் மாவட்டங்களில் கேஸ்கள் உயர்ந்ததும் முக்கிய காரணமாகிறது.

குமரி
முக்கியமாக இன்று கன்னியாகுமரியில் 1076 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. மதுரையில் 1172 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. திருவள்ளூரில் 1344 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. திருச்சியிக் 879 கேஸ்கள் பதிவாகி உள்ளது. ஈரோட்டில் 961 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

மதுரை
உள்மாவட்டங்களில் இப்படி அதிகரிக்கும் கொரோனா கேஸ்களால்தான் ஆக்டிவ் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக குமரி, மதுரை, திருவள்ளூரில் தினசரி கேஸ்கள் 1000ஐ தாண்டி உள்ளதால் ஆக்டிவ் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த டிரெண்ட் வரும் நாட்களிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன்?
இப்போதுதான் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இதில் பல புதிய கேஸ்கள் அடுத்த 20 நாட்களுக்குள் தெரிய வரும். இதனால் இனி வரும் நாட்களில் உள் மாவட்டங்களில் ஆக்டிவ் கேஸ்கள் வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அடுத்து என்ன?
இதனால் உள்மாவட்டங்களில் மருத்துவமனைகளை தயார் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. லாக்டவுன் காரணமாக கட்டுப்படுத்தப்படும் கேஸ்கள் 20 நாட்களுக்கு பின்பே தெரிய வரும். இந்த மாத இறுதியில்தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் கேஸ்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications