மதுரைக்காரங்களா நீங்க.. உங்க வைகை மேம்பாலத்துக்கு 134 வயசாய்ருச்சு.. தெரியுமா?
Recommended Video
மதுரை: மதுரையின் மிக முக்கியமான அடையாளமாக திகழும் ஆல்பர்ட் விக்டர் ( ஏவி மேம்பாலம்) 134 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழமை வாய்ந்த ஏவி மேம்பாலம் 133 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மதுரையில் பாண்டிய மன்னர் காலத்திற்கு பின்னர் பல்வேறு அரசர்கள் ஆட்சி புரிந்தனர். திருமலை நாயக்கரும் மதுரையில் ஆட்சி செய்தார்.
1790 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி மைக்கேல் லியோ மதுரையின் முதல் கலெக்டராக பதவி ஏற்றார். இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் மதுரை நகரம் வந்தவுடன் 1837ம் ஆண்டு ஜான் ப்ளாக் கெயில் மதுரையிலுள்ள மன்னர்களின் கோட்டைச்சுவரை அகற்றி நகரை விரிவாக்கம் செய்தார். ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளம் பகுதியில் தான் குடியிருந்து வந்தனர்.

வைகையில் பாலம்
1857ஆம் ஆண்டு சுதந்திரப் போர் ஏற்பட்டவுடன் ஆங்கிலேயர்கள் வைகையாற்றின் வட பகுதிக்கு தங்கள் அலுவலகத்தை மாற்றினர். இதற்காக வைகையாற்றின் தென் பகுதியும் வட பகுதியையும் இணைக்கும் வகையில் 300 மீட்டர் நீளத்தில் வைகை ஆற்றின் குறுக்கே 16 தூண்கள் அமைத்து புதிய பாலத்தை கட்ட முடிவு செய்தனர்.

கலெக்டர் ஆல்பர்ட் விக்டர்
1884 ம் ஆண்டு கலெக்டராக இருந்த "ஆல்பர்ட் விக்டர்" பாலத்தை கட்டும் பணியைத் தொடங்கி வைத்தார். பாலத்தின் கட்டுமானப் பணிகள் இரண்டரை ஆண்டுகளில் முடிந்தது. 14 தூண்களும் கரும் பாறைகளால் ஆன கற்கள் கொண்டும் பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.

1886ல் திறப்பு
1886 ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி ஏவி பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இது மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட முதல் மேம்பாலம் ஆகும். அன்று முதல் வகையில் பெரிய அளவில் வெள்ளம் வந்தாலும் இந்த மேம்பாலம் எந்த சேதமுமின்றி கம்பீரமாக காட்சியளிக்கிறது.

133 வருட கம்பீரம்
பழமை வாய்ந்த ஏவி மேம்பாலம் தனது 133 ஆண்டை நிறைவு செய்துள்ளது. 134 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது ஏவி மேம்பாலம். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் ஆற்றின் இரண்டு கரைகளில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து இணைப்பை கொடுத்து வருவது ஏபி மேம்பாலம் ஆகும்.
|
செம ஸ்டிராங்
இன்றும் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஏற்கனவே இரண்டு வளைவுகளில் பழுது ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. மேலும் பழுதுகள் ஏற்படாமல் பாலத்தை முறையாக பராமரித்தால் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்றனர்.
|
நினைவுகளைப் பகிருங்கள்
மதுரையின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் ஏவி மேம்பாலம் 134 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது மதுரை மக்களிடையே வரலாற்று சிறப்புமிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரைக்காரர்களே.. இந்த பாலத்தின் நினைவுகளை எங்களுடன் கமெண்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாமே!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications