களைக்கனுமா, கலைக்கனுமா.. பாவம் பாஜகவினரே குழம்பிட்டாங்களே.. மதுரை ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு
மதுரை: மதுரை மாநகராட்சியை கலைக்ககோரி பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த வேளையில் அவர்கள் ‛கலைத்திடுக' என்பதற்கு பதில் ‛களைத்திடுக' என தமிழில் எழுத்து பிழையுடன் கொண்ட பதாகைகளை ஏந்தி இருந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் மதுரை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ள நிலையில் 67 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று தனித்து மாநகராட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
இதற்கு அடுத்தப்படியாக அதிமுக 15 வார்டுகளிலும், காங்கிரஸ் 5 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வர்டுகளிலும், மதிமுக 3 வார்டுகளிலும், விசிக, பாஜக தலா ஒரு வார்டுகளிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

மதுரை மாநகராட்சிக்கு பாஜக எதிர்ப்பு
மதுரை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மேயராக 57வது வார்டு கவுன்சிலர் இந்திராணி பொன்வசந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் மதுரை மாநகராட்சி சார்பில் எந்த பணிகளும் செய்யப்படவில்லை. நிர்வாகம் சரியில்லை. இதனால் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கலைத்திட வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்து வருகிறது.

கலைத்திடக்கோரி ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் தான் மதுரை மாநகராட்சியை கலைத்திட வேண்டும் எனக்கூறி இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பாஜக நிர்வாகிகள் மாநகராட்சியை கலைத்திடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செயல்படாத மதுரை மாநகராட்சியை கலைத்திட வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

எழுத்துப்பிழையுடன் ஆர்ப்பாட்டம்
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைகளில் பாதாகைகள் ஏந்தி இருந்தனர். அந்த பதாகைகளில் ‛‛செயல்படாத மதுரை மாநகராட்சியை கலைத்திட வேண்டும். வேண்டாம்.. வேண்டாம்.. மதுரை மாநகராட்சி வேண்டாம்'' என வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. இதில் ‛கலைத்திடுக' என்பதற்கு பதில் ‛களைத்திடுக' என எழுத்துப்பிழையுடன் பதாகைகளை அவர்கள் வைத்திருந்தனர்.

போட்டோ-வீடியோவால் சலசலப்பு
இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் எழுத்து பிழையுடன் பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. முன்னதாக மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற பாஜக கவுன்சிலர் பூமா மாநகராட்சியை கலைக்ககோரி கோஷம் எழுப்பினார். இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்கோஷம் எழுப்பியதால் அங்கும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications