"நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்" விசிக தலைவர் திருமாவளவன்!
மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து ஜனநாயக சக்திகளும் வாக்குகளை சிதறாமல் பெற ஓரணியில் திரள வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், தெலுங்கானாவில் ராஷ்ரிய சமிதியின் தேசிய கட்சி தொடக்க விழாவில் கலந்துகொண்டேன். அது ஜனநாயக சக்திகள் மதவாத சக்திகளுக்கு எதிராக ஒரு அணியில் திரள நடைபெற்ற கூட்டமாகும். கர்நாடகத்திலிருந்து குமாராசாமி மற்றும் தேசிய அளவிலான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மண்டல் கமிஷன் தலைவர் விபி மண்டல், பகுஜன் சமாஜ் தலைவர் கான்சிராம் அவர்களுக்கு சிலை வைக்க கோரிக்கை விடுத்தேன். வரும் 2024ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து ஜனநாயக சக்திகளும் வாக்குகளை சிதறாமல் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு விடுதலை சிறுத்தைகள் துணை நிற்போம் என்று தெரிவித்தார்.

சாதிய வன்கொடுமை
தொடர்ந்து, சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம், குறிஞ்சான்குளம் பகுதிகளில் ஊர் கட்டுபாடு என்ற பெயரில் சாதியின் பெயரால் சமுக புறக்கணிப்பை நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும். 25 ஆண்டுகள் நடைபெற்ற சாதிய கொடுமைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது. அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

கோவை மணிவிழா
தொடர்ந்து கோவை மணிவிழா நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு, கோவையில் நாளை நடைபெறும் எனது மணிவிழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து செயல்படுகிறதோ அதே போல் பிற மாநிலங்களிலும் செயல்பட வேண்டும் என விடுதலை சிறுத்தை சார்பில் வலியிறுத்துகிறோம் என்று தெரிவித்தார்.

ராஜராஜ சோழன் விவகாரம்
தொடர்ந்து வெற்றிமாறன் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, இன்றைய தமிழ் சமுகத்தில் தமிழ் சமூகம் சமஸ்கிருத சக்திகளால் திணிக்கப்படுகிறது என்பதை இயக்குநர் வெற்றிமாறன் கூறினார். திருவள்ளுவர் சிலைக்கு காவி உடுத்துவது, ராஜராஜ சோழனை இந்து என அடையாளப்படுத்துவது ஆபத்தானது. இத்தகைய போக்கு வன்மையாக கண்டனத்திற்குரியது என்று கூறினார்.

ஆன்லைன் ரம்மி
தொடர்ந்து ஆன்லைன் தற்கொலைகள் தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலங்கள் நிகழ்கின்றன. அதனைத் தடுப்பதற்கான முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இளம் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என அரசுக்கு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
-
கடலூரில் நடந்தது என்ன.. திருமாவளவனிடம் மனம் விட்டு பேசிய பிரேமலதா.. பரபரப்பு பின்னணி -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம்












Click it and Unblock the Notifications