மீண்டும் வெள்ளை நிற டெம்போ வேனுக்கு மாறிய எடப்பாடி பழனிசாமி! அப்போ அர்பேனியா வேன் என்னாச்சு?
மதுரை: மதுரையில் அதிமுக மாநாடு கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில் மாநாட்டுத் திடலுக்கு கொடியேற்றுவதற்காக வந்த எடப்பாடி பழனிசாமி மீண்டும் வெள்ளை நிற டெம்போ வேனில் பயணித்தார்.
அண்மையில் பிரச்சாரம் மற்றும் வெளியூர் பயணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி அர்பேனியா சொகுசு வேன் வாங்கியிருந்த நிலையில் மதுரை மாநாடுக்கு ஏனோ அதனை பயன்படுத்தவில்லை. அதற்கு பதில் TN52 AB4455 என்ற வெள்ளை நிற டெம்போ வேனை பயன்படுத்துகிறார்.

இதன் பின்னணியில் சில செண்டிமெண்ட் காரணங்களும், பாதுகாப்பு காரணங்களும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவப்படங்கள் அடங்கிய ஸ்டிக்கரும் அந்த வேனில் ஒட்டப்பட்டிருந்தது.
டெம்போ டிராவலர் வேனின் இரண்டு பக்கமும் பி.எஸ்.ஓ.க்கள் 8 பேர் படியில் தொங்கிக் கொண்டு பயணித்தனர். அர்பேனியா சொகுசு வேனில் இத்தனை பேர் தொங்கிக்கொண்டு செல்ல முடியுமா என்பது சந்தேகமே. அதனால் தான் அவர் வெள்ளை நிற டெம்போ வேனை செலக்ட் செய்ததாக தெரிவிக்கிறார்கள்.
காலை 8 மணிக்கெல்லாம் வெயில் சுள்ளுனு அடித்த போதும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக சாலையின் இரு மருங்கிலும் தொண்டர்களும் நின்று கொண்டு கையசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி ஹேப்பி.
காலை 10 மணி வரை மாநாட்டுத் திடலில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அதன் பிறகு விடுதிக்கு திரும்பி ஓய்வெடுக்கிறார். மீண்டும் மாலை 4 மணிக்கு மாநாடு மேடைக்கு செல்லவுள்ளார்.












Click it and Unblock the Notifications