என்டிஏ ஆட்சியா? அதிமுக ஆட்சியா? தொடரும் குழப்பம்.. மோடி, எடப்பாடி பழனிசாமியின் வெவ்வேறு பேச்சு!
மதுரை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமையும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி பேசிய போது, அதிமுக ஆட்சி அமைக்கும் என்று கூறி இருந்தார். இருவரும் வெவ்வேறு வகையில் பேசி இருப்பதால், கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மதுரையில் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜிகே வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் அத்தனை தலைவர்களும் பங்கேற்றனர். இதில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், என்டிஏ கூட்டணி 210 தொகுதிகளில் வென்று, அதிமுக ஆட்சி அமைக்கும்.

அதற்கு தென் மாவட்டங்கள் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார். இதன்பின் பிரதமர் மோடி பேசுகையில், தமிழுக்கும், மணக்கும் மல்லிகைக்கு மதுரை பெயர் பெற்ற ஊராகும். தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் தேர்தல் திருப்புமுனையாக இருக்கும் என்பதை மக்கள் நிரூபிப்பார்கள். என்டிஏ கூட்டணியே மாற்றத்தை கொண்டு வரும் என்று தமிழக மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.
அதேபோல் தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் என்டிஏ ஆட்சியே அமையும் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சி என்றும், பிரதமர் மோடி என்டிஏ ஆட்சி என்றும் பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி என்டிஏ ஆட்சி அமையும் என்றே பேசி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அதிமுக என்ற பெயரையே பிரதமர் மோடி சொல்லவில்லை. இந்த முறையும் கூட பிரதமர் மோடி அதிமுக பெயரை தவிர்த்துள்ளார். அதேபோல் கடந்த முறை இந்தியில் பேசிய பிரதமர் மோடி, இம்முறை ஆங்கிலத்தில் உரையாற்ற தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே என்டிஏ ஆட்சி அமையும்.. பாஜகவில் இருந்து அமைச்சர்கள் வருவார்கள் என்று நயினார் நாகேந்திரன் பேசி இருந்தார்.
இதனால் அதிமுக - பாஜக இடையில் இன்னும் கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சியா? என்பதை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்யவில்லை என்று விவாதம் தொடங்கி இருக்கிறது. அதேபோல் பிரதமர் மோடியின் பேச்சு காரணமாக கூட்டத்தில் இருந்த அதிமுகவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
-
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
சவால்களுக்கு தயாராக வேண்டும்.. நீண்ட காலத்திற்கு தாக்கம் இருக்கும்.. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு












Click it and Unblock the Notifications