சீனுக்கு வந்த கிருஷ்ணசாமி.. இம்மானுவேல் சேகரன் நினைவிட பொறுப்பை கொடுங்க! சீற்றத்துடன் கோரிக்கை
மதுரை: இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தின் பொறுப்பை புதிய தமிழகம் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி இருக்கிறார்.
மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் காவல்துறை மெத்தனமாக நடந்து கொண்டுள்ளது.
மதுரையிலிருந்து பரமக்குடி சென்ற போது பல்வேறு இடங்களில் காவல்துறை தடுத்து நிறுத்தியது. 4 மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவானது.பரமக்குடிக்கு செல்ல விடாமல் காவல்துறை வாகனங்கள் குறுக்கே நிறுத்தப்பட்டது.

கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மற்றோரு அமைப்புக்கு அஞ்சலி செலுத்த காவல்துறை அனுமதித்தது. ஒரே சமூகத்திற்கு உள்ளாக மோதலை உருவாக்க காவல்துறை நினைக்கிறது. இம்மானுவேல் சேகரன் நினைவிட பொறுப்பை மாற்ற வேண்டும். இம்மானுவேல் சேகரனுக்கு தொடர்பில்லாதவர்கள் நினைவிடப் பொறுப்பு வழங்கி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

நினைவிட பொறுப்பு
புதிய தமிழகம் கட்சியிடம் நினைவிடப் பொறுப்பை வழங்க வேண்டும். இம்மானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி செலுத்த கூடாது என இருட்டடிப்பு செய்ய இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், காவல்துறை திட்டமிட்டு செய்து வருகிறது. புதிய தமிழகத்தின் முக்கியத்துவத்தை குறைக்க செயல்படுகிறார்கள். சட்டத்தை முழுமையாக மதிக்காமல் எங்களை பலவீனம் செய்யும் வேலையில் காவல்துறை ஈடுபடுகிறது.

திமுக வாக்குறுதிகள்
அரசியல்வாதிகள் அரசியல் செய்யும் நிலைமை போய் தற்போது காவல்துறையை வைத்து அரசியல் செய்கின்றனர். திமுகவின் தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது, ஒரு வாக்குறுதியையும் திமுக செயல்படுத்தவில்லை, அனைத்து தேர்தல் வாக்குறுதிக்கும் நேர்மாறாக திமுகவின் நடவடிக்கைகள் உள்ளது.

மின் கட்டண உயர்வு
மின் கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். தமிழக அரசு மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். மின்சார வாரியத்தில் உள்ள ஊழலை சரி செய்தாலே மின் கட்டணத்தை உயர்த்த தேவையில்லை. செப்டம்பர் 20-ல் மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம்.

நீட் தேர்வு
நீட் தேர்வு தேர்ச்சி குறைவுக்கு திமுகவே பொறுப்பு.திமுகவின் தவறான பிரச்சாரத்தால் நீட்டை மாணவர்கள் எதிர்க் கொள்ள முடியவில்லை. இன்றைய சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத சூழல் உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அரசியலுக்காக நீட் விவகாரத்தில் திமுக தவறாக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்வோம் எனத் திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது. முதல்வர் சர்வாதிகார போக்குடன் பேசி வருகிறார், மக்களின் குரல்களை முதல்வர் செவி சாய்த்து கேட்பதில்லை." என குற்றம்சாட்டினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications