கோவில் நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் அனுமதி தேவையில்லை.. ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு
மதுரை: கோவில்களில் நடத்தப்படும் நிகழ்ச்சி தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.
விருதுநகர் திருச்சுழி அடுத்துள்ள வலையப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பட்டு அரசி அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்தக் கோவில் திருவிழா பல ஆண்டுகளாக எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 மற்றும் 20 தேதிகளில் திருவிழா நடத்த அனுமதி கோரி ஊர் மக்கள் காவல் நிலையத்தில் விண்ணப்பித்து இருந்தனர்.
விண்ணப்பித்துப் பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் போலீசார் இதுவரை பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து திருவிழா நடத்த உரிய அனுமதி அளிக்கக் கோரி ஊர் மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோவில் திருவிழா நடத்த அனுமதி அளித்தார்.
கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தெரிவித்தனர்.
கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருந்தால் அல்லது ஸ்பீக்கர்கள் வைப்பது, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் மட்டுமே போலீசார் அனுமதி தேவை என்றும் தெரிவித்தார்.
இந்த குறிப்பிட்ட வழக்கில் கிராம மக்கள் அனைவரும் விழாவை நடத்த ஒத்துழைப்பு அளிக்கின்றனர் என் குறிப்பிட்ட நீதிபதி, இதனால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்குவதாக உத்தரவிட்டார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications