விவசாயிகளுக்கு பிரச்சனைனா.. எந்த தியாகத்தையும் செய்ய அதிமுக அரசு தயார்… இபிஎஸ் பேச்சு
மதுரை: விவசாயிகள் நலன் பெற எந்த தியாகத்தையும் செய்ய அ.தி.மு.க. அரசு தயாராக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு விவசாய மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை தந்து வருகிறது என்றும், தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி நிகழ்ந்துள்ளதாகவும் கூறினார்.

திட்டங்கள் நிறைவேற்றம்
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து வருகிறார் என்றும் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் விளக்கமளித்தார். அதுபோல இப்போது நாங்கள் சொல்கிற திட்டங்களை நிச்சயம் செய்து முடிப்போம் என்றும் உறுதியளித்தார்.

சாதிக் பாட்ஷா மர்ம மரணம்
திமுகவை தவிர மற்ற எந்த கட்சியும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்றும் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறி வருகிறார் என்றும், திமுக ஆட்சியில் சாதிக் பாட்ஷா உள்ளிட்ட பலரும் மர்மமான முறையில் உயிரிழந்தது உள்ளிட்ட அனைத்து கொலைகளையும் தோண்டியெடுத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

திமுக தான் காரணம்
தான் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, 35,000க்கும் மேற்பட்ட போராட்டங்களை சந்தித்திருப்பதாகவும், அவை அனைத்தும் தி.மு.க.,வின் தூண்டுதலின் பேரிலேயே நடந்ததாகவும் முதலமைச்சர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

ஜல்லிக்கட்டு நினைவுச்சின்னம்
உலக பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டை மீட்டு தந்தது அ.தி.மு.க. அரசு என்று குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், தானும் ஒரு விவசாயி என்ற முறையில், விவசாயிகள் வாழ்வு செழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

விவசாயிகளுக்காக தியாகம்
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், இதற்காக ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அணையை மேலும் பலப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார். அணையை பலப்படுத்தும் பணிக்கு கேரள அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது என்று விளக்கம் அளித்த அவர், விவசாயிகள் நலன் பெற எந்த தியாகத்தையும் செய்ய அ.தி.மு.க. அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
-
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்!












Click it and Unblock the Notifications