கதிகலங்க வைக்கும் ‘காய்ச்சல்’! நிரம்பி வழியும் மருத்துவமனைகள்! ‘இந்த’ அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?
மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சாதாரண காய்ச்சல் முதல் டெங்கு, ஸ்வைன் ப்ளு, வைரஸ் காய்ச்சல் என மக்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு என 100 படுக்கை வசதியுடன் வார்டு தயார் நிலையில் வைத்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் தற்போது இன்ஃப்ளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை இன்ஃப்ளுயன்சா காய்ச்சலின் அறிகுறிகள் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இதுகுறித்து பயப்பட வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இன்ஃப்ளுயன்சா
இது போன்ற அறிகுறிகளுடன் பொதுமக்கள் வந்தால் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. லேசான அறிகுறிகள் கொண்டவர்களை 48 மணி நேரத்திற்கு மருத்துவக் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடனடி சிகிச்சை
குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், தீவிரமான சுவாச பிரச்சனை கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகக்கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், அரசு அறிவுறுத்தியுள்ளது.

அச்சம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களாக சாதாரண காய்ச்சல் முதல் டெங்கு, ஸ்வைன் ப்ளு, வைரஸ் காய்ச்சல் என நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 4 பேருக்கு ஸ்வைன் ப்ளு, 9 பேருக்கு கொரோனா, 6 பேருக்கு டெங்கு வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் 30 பேர் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மொத்தம் 50 பேர் காய்ச்சல் வார்டில் சிகிச்சையில் உள்ளனர்.

தென் மாவட்டங்கள்
இந்த நிலையில் இன்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புற நோயாளிகள் பிரிவில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு என 100 படுக்கை வசதியுடன் வார்டு தயார் நிலையில் வைத்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதே நிலை தான் நீடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications