கீழடியில்.. ரூ.12 கோடி மதிப்பீட்டில் விரைவில் திறக்கப்படுகிறது மியூசியம்.. முதன்மை செயலாளர் அதிரடி
கீழடியில் விரைவில் வருகிறது மியூசியம்
மதுரை: கீழடியில் தொல்லியல் துறையின் மூலம் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படுகிறது.. அதற்கான பணிகளும் விரைந்து முடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது...
இங்கு நடக்கும் ஆய்வுகள் ஒவ்வொரு முறையும் நமக்கு ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கின்றன.. இதுவரை 800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன...

அகழாய்வு
கீழடி அகழாய்வு தொடங்கும்போது, தொடக்க வரலாற்று காலத்தின் வாழ்விட பகுதியைக் கண்டறிய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தொடங்கப்பட்டது.. ஆனால், இந்த கீழடி அகழாய்வில் பலகட்டங்களாக கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் பல்வேறு வினாக்களுக்குப் பதிலளித்தன..

ஆய்வகள்
ஆய்வகங்களிலிருந்து பெறப்பட்ட ஆய்வு முடிவுகளானது ஆய்வாளர்கள், பொதுமக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இதையடுத்து, தொல்லியல் துறை சார்பாக ஒரு மியூசியம் கட்ட முடிவாகி, அந்த பணியும் நடந்து வருகின்றன.. இதற்காக கலெக்டர், சிறப்பு கவனம் எடுத்து தேவையான திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வந்து கொண்டிருக்கிறார்.

முதன்மை செயலாளர்
இந்நிலையில், அகழ்வாராய்ச்சி மையம் மற்றும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் பணி ஆய்வு செய்யப்பட்டன.. கலெக்டர் பி.மதுசூதன்ரெட்டி முன்னிலையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் இந்த ஆய்வினை மேற்கொண்டார்.

மியூசியம்
அப்போது, தொல்லியல் துறையின் மூலம் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் ஒரு மியூசியம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டார்... பிறகு, அந்த பணிகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அந்த அவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிக்கும்படியும், திட்டமிட்ட காலத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்றும், அங்கிருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார்... அதேபோல, கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 6ம் கட்ட அகழ்வாய்வு, நடந்து வரும் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அருங்காட்சியம்
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், "கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைத்திட தொல்லியல் துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. கீழடி, கொந்தகை, மணலூர் போன்ற பகுதியில் கண்டறியப்படும் அரிய வகை பொருட்களை, பொதுமக்கள் கண்டுகொள்ளலாம்.. அதேபோல, சிந்து சமவெளி நாகரிகத்தையும் தெரிந்து கொள்ளும் வண்ணம் உலகத்தரம் வாய்ந்த அகழ்வாராய்ச்சி மையம் அமைக்கப்படுகிறது... அதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும்" என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications