புதிய கட்சி தொடங்குவது பற்றி இன்னும் ஆலோசிக்கவில்லை... மவுனம் கலைத்த மு.க.அழகிரி...!
மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பது பற்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவெடுப்பேன் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
பல மாதங்களுக்கு பிறகு தனது மவுனத்தை கலைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் தன்னை விட்டு விலகவில்லை என்றும் தெரிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக தன்னுடைய ஆதரவாளர்களை தாம் சந்திக்கவில்லை என்றும் விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். அப்போது புதிய கட்சி தொடங்குவதா இல்லை வேறு யாருக்கும் ஆதரவு அளிப்பதா என்பது பற்றி முடிவெடிக்கப்படும் என மு.க.அழகிரி கூறியிருக்கிறார்.
திமுகவில் தற்போது புகைச்சல் அதிகமாகிவிட்டதாகவும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுகவின் நிலையை நீங்களே அறிந்துகொள்வீர்கள் எனவும் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் திமுக மீதும் தனது சகோதரர் ஸ்டாலின் மீதும் அவருக்கு இருக்கும் கோபம் குறையவில்லை என்பது வெளிப்படுத்தியிருக்கிறார்.
கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரது மறைவுக்கு பிறகும் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்த் பயன்படுத்திய வெற்றிடம் என்ற வார்த்தையை மு.க.அழகிரியும் இப்போது பயன்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் ரஜினியுடன் அழகிரி கரம் கோர்க்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே திமுகவில் தற்போது உள்ள தலைவர்கள் பதவிக்காகவே இருக்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications