உடல்நலக்குறைவு.. மதுரை ஆதீனம் அருணகிரி சுவாமி மருத்துவமனையில் அனுமதி
மதுரை: உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், மதுரையிலுள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமணங்களில் ஒன்று மதுரை ஆதீனம். இங்கு தலைமை வகிக்க நியமிக்கப்படுபவர் ஆதீனம் என்று அழைக்கப்படுகிறார்.

திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது மதுரை ஆதீனம். இதுவரை 292 பேர் இங்கே மடாதிபதியாக. இதில் 292வது ஆதீனம்தான், அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது உடல்நிலைக் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இதுபோன்று இதற்கு முன்பும், பலமுறை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அருணகிரி சுவாமி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாலமன் பாப்பையா, ராஜா உள்ளிட்டவர்களுடன் பட்டிமன்றங்களில் பங்கேற்று புகழ் பெற்றவர் பாரதி பாஸ்கர். முன்னனி தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறாராம். இவர் சன் டிவியில் வாங்க பேசலாம் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியவராகும். பாரதிக்கு பாஸ்கர் கணவர் பெயர் லட்சுமணன். இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், பாரதி பாஸ்கருக்கு இன்று தீடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications