மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள்.. அசால்ட் காட்டிய கார்த்தி முதலிடம்! கார் பரிசு
மதுரை: மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ள நிலையில் 19 காளைகளை அடக்கி கார்த்தி என்பவர் முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது. இதேபோல் 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்தார் அபி சித்தர். இதேபோன்று மதுரை வாகைக்குளம் பாசிங்காபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் 11 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பிடித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஏவிஎம் பாபு என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. காளை உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
இரு போட்டிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 900-க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கினர். வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தங்கக் காசுகள், கார் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வழக்கமான உற்சாகத்துடனும் பாரம்பரியத்துடனும் தொடங்கியது.
அமைச்சர் மூர்த்தி தலைமையில்
இந்த ஜல்லிக்கட்டை காண மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். அலங்காநல்லூரில் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு காளியம்மன் கோவில் முன்பாக உள்ள வாடிவாசலில் அரசு வழிகாட்டுதலின்படி தொடங்கியது.
அமைச்சர் மூர்த்தி தலைமையில், மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
19 காளைகளை அடக்கி
முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து சுவாமி காளைகளான முனியாண்டி சுவாமி கோவில் காளை, அருவிமலை கெங்கையம்மன், கருப்பசாமி கோவில் காளை, வலசை கருப்பசாமி கோவில் காளைகள் வரிசையாக அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர் தகுதி பெற்ற 1,137 காளைகள் களத்தில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
சீறிப்பாய்ந்த இந்த காளைகளை அடக்க ஒவ்வொரு சுற்றிலும் தகுதி பெற்ற 933 வீரர்கள் சுழற்சி முறையில் களமிறக்கப்பட்டனர். அவர்களுக்கு ஒவ்வொரு சுற்றாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி கருப்புராயிணியைச் சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்தார்.
ரூ.8 லட்சம் கார் பரிசு
முதல் பரிசு வென்ற வீரருக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்படுகிறது.
இதேபோல் 17 காளைகளை அடக்கி மதுரை பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் இரண்டாம் இடம் பிடித்தார். இதேபோன்று மதுரை வாகைக்குளம் பாசிங்காபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் 11 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பிடித்தார்.
சிறந்த காளை
புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஏவிஎம் பாபு என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. காளை உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 13 பேர் உள்பட 58 பேர் காயமடைந்தனர். அவர்களில் 15 பேர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications