ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் அமைப்புகள்.. மதுரை எம்பி சு.வெங்கடேசன் சுப்ரீம் கோர்ட்டில் அதிரடி மூவ்!

Subscribe to Oneindia Tamil

மதுரை : தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக இணைக்கக் கோரி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்துவது மிருக வதை தடுப்புச் சட்டத்தை மீறுவதாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் தமிழர் கலாச்சார நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தடை ஏற்பட்டது.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசின் இந்தச் சட்டத்திற்கு எதிராக சில அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.

காதல் + வீரம்

காதல் + வீரம்

சு.வெங்கடேசன் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவில், "தமிழர்களின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக ஜல்லிகட்டு உள்ளது. காதலையும் வீரத்தையும் போற்றிப்பாடிய தொன்மையான தமிழ் இலக்கியங்களில் ஜல்லிகட்டு 'ஏறுதழுவுதல்' எனும் பெயரில் இடம்பெற்றுள்ளது. பன்னெடுங்காலமாக தமிழர்களுக்கு ஏறுதழுவுதல் மீதான பிணைப்பு இந்நாள் வரைக்கும் தொடர்வதை இது காட்டுகிறது.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடத்தப்பட்டு வரும் Bull fighting எனும் மாட்டுச் சண்டை விளையாட்டுகள் பெரும்பாலும் வணிக நோக்கில் விளையாடப்படுகின்றன. ஆனால், ஜல்லிகட்டு அப்படியில்லாமல் கலாச்சார நிகழ்வாக கடைபிடிக்கப்படுகிறது. இது உள்ளூர் கிராம நிர்வாகத்தால் மாவட்ட ஆட்சியர், வருவாய் அதிகாரிகள், கால்நடைத்துறை, மருத்துவர்கள் ஆகியோரின் மேற்பார்வையிலேயே நடத்தப்படுகிறது.

உயிரிழப்பு நோக்கமல்ல

உயிரிழப்பு நோக்கமல்ல

வெளிநாடுகளில் மாடுபிடிச் சண்டையில் மாடோ அல்லது மனிதரோ உயிரிழப்பது பொதுவானதாகவும் அந்த விளையாட்டின் ஓர் அங்கமாகவும் உள்ளது. ஆனால், ஜல்லிகட்டு கால்நடைகளின் வளத்தை உயர்த்தவும் ஜல்லிகட்டு நடத்தப்படும் கிராமங்கள், அதற்காக மாடுகளை வளர்க்கும் கிராமங்களின் பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்குமான ஆதாரமாக உள்ளது. ஜல்லிகட்டுக்கு அனுமதி அளித்த அரசாணையால் நாட்டு மாடுகளின் இனப்பெருக்கம் மற்றும் தமிழர்களின் கலாச்சார பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது.

கலாச்சார நிகழ்வு

கலாச்சார நிகழ்வு

ஐக்கிய நாடுகள் சபையின் Convention of Protection of Cultural and Societal Rights, 1948ன் படி ஜல்லிக்கட்டை அனுமதிப்பது அவசியம். போலோ போன்ற விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கு ஊக்கமருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு எந்த ஊக்க மருந்தும் கொடுக்கப்படுவதில்லை. மேலும் ஜல்லிகட்டானது ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பங்குபெறும் நிகழ்வாக இல்லாமல் தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ளும் கலாச்சார நிகழ்வாக உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில்

சுப்ரீம் கோர்ட்டில்

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பாரம்பரிய மொழி, அறிவு, வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் அடுத்த தலைமுறைக்கு அது கடத்தப்பட வேண்டும் என்பதையும் UNESCO வலியுறுத்துகிறது. ஜல்லிகட்டு விளையாட்டுக்கு அனுமதி வழங்கும் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் என்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டும்" எனக் கோரி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+