சாக்கடை பிரச்சனை.. மீண்டும் வந்தது எப்படி? மதுரையில் மாநகராட்சி அதிகாரிகளை பதறவிட்ட பிடிஆர்!
மதுரை: மதுரை மஞ்சமேடு பகுதியில் எதிர்க்கட்சியாக இருக்கும் போதே சாக்கடை கால்வாய் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் போது மீண்டும் அதே பிரச்சனை எப்படி வந்தது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மதுரை மாநகராட்சியின் மேயராக இருந்த இந்திராணி சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் மாநகராட்சியில் நடைபெற்ற ரூ.150 கோடி ஊழல் விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சில மாதங்களாக சிறையில் இருந்த பொன்வசந்த், கடந்த மாதம் ஜாமீனில் வெளி வந்தார்.

இதன்பின் மேயர் பதவியில் இருந்து இந்திராணி விலகினார். இதன்பின் மதுரை புதிய மேயர் யார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதுவரை திமுக தலைமையால் மேயரை நியமனம் செய்ய முடியவில்லை. மேயர் நியமனம் விவகாரத்தில் இம்முறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதி மக்களை வழக்கம் போல் சந்தித்தார்.
அவருடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றனர். அப்போது மஞ்சமேடு பகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்ட போது, திடீரென மக்கள் அடுக்கடுக்கான புகார்களை அளித்தனர். அப்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 2016 முதல் 2021 வரை எதிர்க்கட்சி எம்எல்ஏ-வாக இருந்தேன்.. தற்போது அமைச்சராக உள்ளேன். இந்த பகுதியில் என்ன மாற்றம் நடந்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பொதுமக்கள், தண்ணீர் எல்லாம் சரியாக வருகிறது.. ஆனால் சாக்கடை மட்டும் அடைத்து நாற்றம் வீசுகிறது என்று பதில் அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பக்கம் திரும்பிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எதிர்க்கட்சி எம்எல்ஏ-வாக இருந்த போதே, சாக்கடை கால்வாய் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.
தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் போது, எப்படி இந்த பிரச்சனை மீண்டும் வந்தது என்று கேள்வி எழுப்பினார். இதன்பின் அமைச்சரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் அமைதியாக நின்றனர். இதையடுத்து சாக்கடை கால்வாய் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications