நம்ப வைத்து கழுத்தறுக்கும் திமுக.. பாஜக மாதிரிதான் செயல்படுது.. ஏன் குறை சொல்லணும்? - சீறிய சீமான்!
மதுரை : தி.மு.கவே பா.ஜ.கவாக செயல்படுகிறது, பிறகு எதற்காக குறை கூறுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
Recommended Video
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இன்றைக்கு பாஜக, காங்கிரஸ் நிலைப்பாட்டைத்தான் திமுகவும் எடுக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், 7 பேர் விடுதலை பற்றி பேசியவர்கள் ஆட்சிக்கு வந்த பின் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு விட்டார்கள். நம்ப வைத்து கழுத்தறுப்பது போல் திமுகவின் செயல்பாடு உள்ளது என விமர்சித்துள்ளார்.

சீமான்
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு வழங்கிய தீர்ப்பை மற்றவர்களுக்கு வழங்கலாம் என நீதியரசர் தெரிவித்தார். ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்கள் தொடர்பாக மறுபடியும் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போட உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

நம்ப வைத்து
ஆட்சிக்கு வரும் முன் 7 பேர் விடுதலை பற்றி பேசியவர்கள் ஆட்சிக்கு வந்த பின் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு விட்டார்கள். நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யாமல் ஏமாற்றி விட்டார்கள். நம்ப வைத்து கழுத்தறுப்பது போல் திமுகவின் செயல்பாடு உள்ளது. இவர்களின் விடுதலை தொடர்பாக நாம் தமிழர் கட்சி நீதிமன்றம் வரை சென்று போராடும் என தெரிவித்தார்.

அக்னிபாத்
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுப்பது குறித்து பேசிய சீமான், கலவரத்தை ரசிப்பவர்கள் கையில் ஆட்சி இருந்தால் இப்படித்தான் நடக்கும். கலவரம் நடக்கும்போது மத்திய அரசு அதை நிறுத்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆகவே கலவரத்தை ரசிப்பவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் இப்படித்தான் நடக்கும். இளம் வீரர்களை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ப்பதற்காக தான் பாஜக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது என சீமான் குற்றம்சாட்டினார்.

பாஜகவை குறைகூறலாமா?
மேலும், பேசிய அவர், கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை அழைத்து திமுக நிகழ்ச்சி நடத்தியது. கருணாநிதி சிலையைத் திறக்க வேறு ஆட்களே கிடையாதா? பாஜக ஆளும் மாநிலத்தில் கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பிரதமரையோ, துணை ஜனாதிபதியையோ அழைத்ததில்லை. அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ்ஸை குறை கூறுவது ஞாயம் இல்லை. திமுகவே பாஜகவாக இயங்குகிறது பிறகு எதற்காக குறை கூறுகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications