தேரோடும் எங்க சீரான மதுரையில... மாசி வீதியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
திருக்கல்யாணம் முடிந்து இறைவனும் இறைவியும் தம்பதி சமேதராக திருத்தேரில் எழுந்தருளியுள்ள அழகைக் காண லட்சக்கணக்கான பக்தத்கள் மதுரையில் திரண்டுள்ளனர்.
மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோரோட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாசி வீதிகளில் திரண்டு வந்து திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
Recommended Video
உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா மதுரையில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 12ஆம் தேதி பட்டாபிஷேகமும் 13ஆம் தேதி திக்விஜயமும் நடைபெற்றது.
நேற்றைய தினம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருக்கல்யாண நிகழ்ச்சியைக் காண பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர்
அலங்காரமாக மணமேடையில் எழுந்தருளியிருந்த மீனாட்சி அம்மனுக்கு வைரகற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தாலி அணிவிக்கப்பட்டது. பிரியாவிடை அம்மனுக்கும் தாலி அணிவிக்கப்பட்டது. அப்போது ஏராளமான பெண்கள் புது தாலி மாற்றிக்கொண்டனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை விருந்து வைபவம் நடைபெற்றது.

கல்யாண விருந்து
சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கல்யாண விருந்து நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள், 500 க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இவர்களுடன் 1000 தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், கூட்டு, பொரியல், கேசரி, வடை என சுவையான உணவு வழங்கப்பட்டது.

சித்திரை தேரோட்டம் கோலாகலம்
நேற்றிரவு அம்மன் பூப்பல்லக்கிலும், சுவாமியும், பிரியாவிடையும் தங்க அம்பாரியுடன் யானை வாகனத்திலும் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நான்கு மாசி வீதிகளிலும் ஆடி அசைந்து வந்த திருத்தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

சித்திரைக்கு மாறிய தேரோட்டம்
16 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்த தேரோட்டம் மாசி மாதத்தில் நடைபெற்றது. எனவேதான் அந்த வீதிகளுக்கே மாசி வீதிகள் என்று பெயர் வந்தது. திருமலை நாயக்கர் காலத்தில்தான் கள்ளழகர் கோவில் திருவிழாவுடன் இணைந்து சித்திரை மாதத்திற்கு மாற்றினார் திருமலை நாயக்கர்.

மாசி வீதிகளில் வலம் வந்த தேரோட்டம்
இதற்காகவே மாசி வீதிகள் என்ற பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் மதுரையில் தேரோட்டம் கீழமாசிவீதியில் தொடங்கி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதி என்று 4 மாசி வீதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தின் நடுவே ஆடி அசைந்து அழகு மிளிர மிதந்து வரும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications