"காமராஜர் படிக்க வைத்தார்.. இந்த அரசு குடிக்க வைக்கிறது".. திமுக மீது ஜி.கே. வாசன் பாய்ச்சல்
தமாகா தலைவர் ஜிகே வாசன், திமுக அரசை சரமாரி விமர்சித்து பேசியுள்ளார்
மதுரை: காமராஜர் மாணவர்களை, படிக்க வைத்தார்... ஆனால் இந்த அரசு குடிக்க வைக்கிறது என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டா.. அப்போது அவர் திமுக அரசை சரமாரி தாக்கி பேசினார்.

நேசித்த மண்
அவர் பேசும்போது, எல்லாத் துறையிலும் மதுரை சிறப்பாக செயல்பட காரணமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர்... அவர் மிகவும் நேசித்த மண் மதுரை.. நேர்மை, தூய்மை, வெளிப்படை தன்மை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டு காமராஜர்... அதுபோல்தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், தூய்மை, நேர்மை, வெளிப்படை தன்மைக்கு எடுத்துக்காட்டாக இன்றைக்கு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

தமாகா மட்டும்தான்
அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் கட்சி தமாகா மட்டுமே.. தமிழகத்தில் திமுகவின் ஒரு வருட ஆட்சி நிறைவு பெற்றுள்ளது. ஆனால் மக்களின் எந்த ஒரு எண்ணங்களையும் பிரதிபலிக்காத ஆட்சி தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது... சட்டம், ஒழுங்கு மிக மோசமாக உள்ளது... தமிழக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான செயலில் இனியாவது திமுக ஈடுபட வேண்டும்... ஆனால் அதை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகளை பழி வாங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவது சரியில்லை.

குடிக்க வைக்கிறது அரசு
பூரண மதுவிலக்கு கொண்டு வந்தபிறகு, பெருந்தலைவர் காமராஜர் 6 ஆயிரம் புதிய பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு படிக்க கற்று தந்தார்.. இந்த அரசு மாணவர்களுக்கு குடிக்க கற்றுத்தரும் அரசாக இருக்கிறது என்பது வேதனையாக இருக்கிறது.. காமராஜர் படிக்க வைத்தார். ஆனால் இந்த அரசு இளைஞர்களை குடிக்க வைக்கிறது... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, மாணவர்களும், மாணவிகளும், பள்ளி சீருடையிலேயே மதுபாட்டிலுடன் திரியும் வீடியோக்களை யூடிப்பிலே நமது பெற்றோர்கள் பார்த்து வயிற்றெரிச்சல் அடைகிறார்கள்..

டாஸ்மாக் - பிசாசு
ஏழை எளிய மக்களின் வருமானம் டாஸ்மாக் மூலம் பறிக்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் 2200 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சா தமிழகத்தை நாசமாக்கி வருகிறது. மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லி வந்த அரசு, இன்று போதை என்ற பிசாசுவின் பிடியில், சிக்க வைக்க நினைக்கிறது.. இதற்கு நடுவில், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டமும் அதிகரித்துள்ளது. இதனை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க அரசு முயற்சி செய்ய வேண்டும்.

படிச்சு பாருங்க
தேர்தல் சமயத்தில் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. தாங்கள் வாக்குறுதியில் என்ன கொடுத்தோம் என்பதை திமுக மறுபடியும் ஒருமுறை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். பணபலம், எதிலும் பணம் என்று மட்டுமே ஒரு அரசாங்கத்தின் கோட்பாடாக, கொள்கையாக இருக்கக்கூடாது என்று வாசன் கேட்டுக் கொண்டார்... திமுகவை கடுமையான விமர்சித்து, வாசன் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications