வலுவிழந்த காற்றழுத்தம்..பல ஊர்களில் திடீர் மழை..சிவகாசியில் சாரல்..இன்று யாருக்கு குடை அவசியம்
மதுரை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகாலை முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சிவகாசியில் நள்ளிரவு முதலே விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மேலும் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்கக் கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இலங்கையின் திரிகோணமலை அருகே கடலோரப் பகுதியை நெருங்கியதும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அது நேற்று முன்தினம் இரவு இலங்கையின் திரிகோணமலைக்கு தெற்கே நகர்ந்து, மேற்கு நோக்கி இலங்கையின் ஊடாக கடந்து சென்று நேற்று காலை குமரிக் கடல் பகுதிக்கு சென்றது.

இந்த நகர்வின் காரணமாக இலங்கை மற்றும் வட இலங்கை, மன்னார் வளைகுடா பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மேலும், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்தது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
இதனிடையே நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை தென் மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். மதுரை மாவட்டம் டி.குண்ணத்தூர், கல்லுப்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று நள்ளிரவிலும் இன்று அதிகாலையிலும் பலத்த மழை பெய்தது. இதனால் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மேலும் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரைக்கும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30 ஆம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications