தமிழகத்தில் கொரோனா நிவாரணத்திற்கு.. 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை.. வழங்கிய தி மார்டின் குழுமம்
சென்னை: தி மார்ட்டின் குழுமத்தின் சார்பாக சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பல உயிர்களை நாம் இழந்துள்ளோம். இந்தாண்டு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் தீவிர தன்மை மிக மோசமாக உள்ளது.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மாநில அரசின் வருவாய் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள அனைவரும் தங்களால் முடிந்த நிதியை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து பெரு நிறுவனங்கள், தனிநபர்கள், மாணவர்கள் எனப் பலரும் தங்களால் முடிந்த நிதியை நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், தி மார்ட்டின் குழுமத்தின் சார்பாக, மார்ட்டின் டிரஸ்ட் சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருட்களை மாநில அரசுக்கு வழங்கியுள்ளது.
100 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள், 400க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள், 1000க்கும் மேற்பட்ட ஆக்சிமீட்டர்களை மார்டின் குழுமம் வழங்கியுள்ளது. மேலும், 12.5 N95 மாஸ்க்குகள், 10 ஆயிரம் சானிடைசர்கள், 5000 டூத் ப்ரஷ்களையும் தமிழக அரசுக்கு மார்டின் குழுமம் அளித்துள்ளது.
இதனை மார்டின் குழுமத்தின் அறங்காவலர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது அவருடன் மார்டின் குழுமத்தின் இயக்குநர் டெய்சி மார்டின், செயல் அலுவலர் ஜார்ஜ் மார்ஷல் ஆகியோர் உடனிருந்தனர்.
இது குறித்து மார்ட்டின் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க முடிந்த உதவிகளைச் செய்வதாகவும் மக்கள் விரைவில் இந்த பெருந்தொற்றில் இருந்து மீண்டு வரப் பிரார்த்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications