பிரபல நடிகையின் 14 வயது மகன் மாடியில் இருந்து குதித்து த*கொலை.. டியூஷன் போக சொன்னதால் விபரீதம்
மும்பை: இக்காலத்தில் குழந்தைகள் எமோஷனலாக மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். இதனால் சின்ன சின்ன விஷயங்களுக்கும் கூட எடுக்கக்கூடாத முடிவை எடுத்துவிடுகிறார்கள். அப்படித் தான் பிரபல நடிகை ஒருவரின் மகன் டியூஷன் செல்லச் சொன்னதற்காக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இந்தக் காலத்தில் பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். குழந்தைகளுக்கு எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். அதேநேரம் இந்தளவுக்கு ஒரு புரோடெக்டட் சூழலில் வளர்வதால் குழந்தைகளுக்கு வெளியுலகம் பெரியளவில் தெரிவதே இல்லை.

குழந்தைகள்
இதனால் சிறு சோகம் அல்லது நினைத்தது நடக்காமல் போகும் போது அவர்கள் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கேட்பது கிடைக்காத போது அல்லது நினைத்தது நடக்காது போது என்ன செய்ய வேண்டும் என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை. இதனால் மோசமான முடிவுகளையும் அவர்கள் எடுக்கிறார்கள். இப்போது அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது.
பிரபல நடிகையின் மகன்
பிரபலமான இந்தி மற்றும் குஜராத்தி டிவி நிகழ்ச்சிகளில் பணியாற்றிய நடிகை ஒருவரின் 14 வயது மகன் சின்ன விஷயத்திற்குத் தனது உயிரையே மாய்த்துக் கொண்டு இருக்கிறான். டியூஷனுக்கு செல்வது தொடர்பான விவகாரத்தில் அந்தச் சிறுவனுக்கும் தாய்க்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. டியூஷன் செல்லுமாறு தாய் கூறிய நிலையில், அதை அந்தச் சிறுவன் ஒப்புக்கொள்ளவில்லை.
இதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சின்ன விஷயத்திற்கே மனம் உடைந்த அந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். அவர்கள் வீடு கண்டிவாலியில் உள்ள புரூக் கட்டிடத்தின் 51வது மாடியில் இருக்கிறது.. தாயுடன் சண்டை ஏற்பட்டதால் கோபத்தில் அந்த சிறுவன் புதன்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளான்.
சிறுவன் தற்கொலை
சில மாடிகள் கீழே இறங்கிய அந்த சிறுவன் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவனின் தாயாரிடமும் இது குறித்து விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
தாய் வாக்குமூலம்
சிறுவனின் தாயார் தனது வாக்குமூலத்தில், மாலை 7 மணியளவில் டியூஷன் செல்லுமாறு மகனிடம் கூறியதாகத் தெரிவிக்கிறார். ஆனால், சிறுவன் டியூஷன் செல்லத் தயக்கம் காட்டியுள்ளார். இதையடுத்து கண்டித்துவிட்டு, கட்டாயம் டியூஷன் சென்றே தீர வேண்டும் என தாய் கூறிய பிறகே, அந்தச் சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்றதாக அந்த நடிகை வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்..
இருப்பினும், பின்னர் கொஞ்ச நேரத்திலேயே காவலாளி ஒருவர் ஓடி வந்து நடிகையிடம் அவரது மகன் கட்டிடத்திலிருந்து விழுந்ததாகத் தெரிவித்தார். தனது மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அந்தப் பெண் துடிதுடித்துப் போனதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விபத்து மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குடும்பத்தினரின் வாக்குமூலத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்றும், விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications