மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடிவுக்கு வராத கொரோனா..உலகம் முழுவதும் 58 கோடி பேரை தொட்டது.. ஜப்பானில் படு தீவிர பரவல்

Google Oneindia Tamil News

மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 8,25,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 8,52,086 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 58 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் படு தீவிரமாக பரவி வருகிறது.

Covid 19 world update: Corona affects 58 crore people - Severe spread in Japan

சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 58 கோடி மக்களை தனது கோர நாக்கினால் தொட்டுள்ளது கொரோனா.

அள்ள அள்ள பணம்.. 'மணி பேங்க்’ நடிகையின் வீடுகள்- இன்னொரு வீட்டிலும் தோண்டித் துருவும் அமலாக்கத்துறை!அள்ள அள்ள பணம்.. 'மணி பேங்க்’ நடிகையின் வீடுகள்- இன்னொரு வீட்டிலும் தோண்டித் துருவும் அமலாக்கத்துறை!

உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. கொரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் மொத்தம் 58,03,19,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 55,03,88,926 பேர் மீண்டுள்ளனர். உலகம் முழுவதும் 42,293 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் உலகம் முழுவதும் பேர் ஒரே நாளில் 1,878 உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 64,17,064 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 90,701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,30,45,824 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மொத்தம் 10,54,997 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 42,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 3,37,95,192 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில் முழுவதும் மொத்தம் 6,78,375 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 45,515 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல இத்தாலியிலும் நாட்டிலும் கொரோனாவால் 54,088 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் கொரியாவில் ஒரே நாளில் 85,275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பான் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,30,055 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 1,21,18,112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,04,80,392 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் 32,286 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர்.

ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா எப்போது ஒழியும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. எனவே கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் அவசியம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

English summary
Corona update world wide: (உலக அளவில் கொரோனா பாதிப்பு அப்டேட்) The number of people affected by corona virus is increasing day by day. 8,25,931 people were affected in a single day. 8,52,086 people have recovered from Corona in a single day. 58 crore people have been affected by Corona around the world. 55 crore people have recovered from Corona.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X