தகுதிநீக்க நோட்டீஸால் பதறிய சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள்! உச்சநீதிமன்றத்தில் மனு! இன்று விசாரணை!
மும்பை: மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் 16 பேருக்கு தகுதிநீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தடைக்கோரி அவர்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகின்றன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல் அமைச்சராக உள்ளார்.
இந்த கூட்டணியின் ஆட்சி மீது சிவசேனாவின் எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் சிவசேனாவின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர்.

அசாமில் அதிருப்தி எம்எல்ஏக்கள்
ஏக்நாத் ஷிண்டேவுடன் 37 சிவசேனா எம்எல்ஏக்களும், 9 சுயேச்சை எம்எல்ஏக்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம் என கூறினாலும் அதிருப்தியாளர்கள் கண்டுக்கொள்ளவில்லை.

நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
இந்நிலையில் தான் உத்தவ் தாக்கரே தனது கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். மேலும் ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். நேற்று மகாராஷ்டிர மாநில முதலமைச்சரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தலைமையில், அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

தகுதிநீக்க நோட்டீஸ்
இதன் தொடர்ச்சியாக நேற்று 16 சிவசேனா எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபை துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஜூன் 27 ம் தேதி(இன்று) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் பதில் அளிக்காத பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை பாயலாம்.

தடைக்கோரிய மனு இன்று விசாரணை
இதனால் முன்னெச்சரிக்கையாக இன்று அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே சார்பில் நேற்று மாலை 6.30 மணியளவில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தகுதி நீக்க நோட்டீசுக்கு தடை கோரப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் பட்டியலிடப்பட்டது. அதன்படி அதிருப்தி எம்எல்ஏக்களின் மனு இன்று(திங்கட்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications