சொகுசு கப்பலில் படு சீக்ரெட்டான ரேவ் பார்ட்டி.. மாறு வேடத்தில் புகுந்த போலீஸ்.. நடந்தது என்ன?
மும்பை: மும்பை கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரேவ் பார்ட்டியை போதை பொருள் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
கோவாவைச் சேர்ந்த கார்டீலியா க்ரூஸ் என்ற கப்பலில் போதை பொருள் புழங்கும் ரேவ் பார்ட்டி நடப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த பார்ட்டி குறித்த தகவல்கள் இந்த பிரிவு போலீஸாருக்கு இரு வாரங்களுக்கு முன்பே கிடைத்துவிட்டதாக தெரிகிறது. அதன்படி மும்பை கடலோரத்தில் நின்று கொண்டிருந்த இந்த கப்பலில் நிகழ்ந்த நிகழ்ச்சி குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கப்பல்
கோவாவை சேர்ந்த இந்த கப்பலில் அக்டோபர் 2, 3, 4 ஆகிய 3 நாட்களுக்கு இந்த பார்ட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். இந்த நிகழ்வை டெல்லியை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்த முற்பட்டதாக தெரிகிறது. மும்பையிலிருந்து கோவாவுக்கு சனிக்கிழமை இரவு இந்த கப்பல் புறப்பட்டு , இந்தக் கப்பலில் 3 நாட்களும் பார்ட்டி நடத்தப்பட்டு பின்னர் மும்பைக்கு திங்கள்கிழமை இந்த கப்பல் திரும்பி வரும் என்பதுதான் பார்ட்டியின் திட்டம் என கூறப்படுகிறது.

பணக்கார இளைஞர்கள்
இந்த 3 நாட்களும் கப்பலில் பணக்கார இளைஞர்கள், பெண்கள் நிர்வாணமாக நடனம் ஆடுவது, போதை பொருளை பயன்படுத்துவது உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் நடந்து கொள்வர். போதை பொருள் புழக்கம் என்பது பாலிவுட்டில் மிகப் பெரிய பிரச்சினையாக வெடித்துள்ள நிலையில் இந்த பார்ட்டி குறித்து போதை தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தகவல் கிடைத்துள்ளது.

பயணிகள் போல் டிக்கெட்
இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குநர் சமீர் வாங்கடே தலைமையிலான குழுவினர் இந்த கப்பலில் சனிக்கிழமை இரவு பயணிகள் போல் மாறுவேடத்தில் பயணிக்க டிக்கெட் பெற்று கப்பலில் ஏறினார். அப்போது அங்கிருந்த சக பயணிகள் கோகைன், எக்ஸ்டேசி, எம்டிஎம்ஏ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டனர்.

தேடுதல் வேட்டை
உடனே அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தியதில் அங்கிருந்த பயணிகளின் ஆடைகள், உள்ளாடைகள், பர்ஸ்கள், ஹேண்ட் பேக்களில் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையின் பேரில் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை தங்கள் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications