நியூசிலாந்து டி20 தொடருக்கான அணி அறிவிப்பு: கேப்டன் ரோகித் சர்மா! கோலி அவுட்.. வீரர்கள் லிஸ்ட் இதோ
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
இந்த தொடரில் ஆட உள்ள அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட, வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. அதேநேரம், விராட் கோலி அணியில் இடம் பெறவில்லை.
டி20 தொடருக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து, உலக கோப்பை தொடருடன் விலக உள்ளதாக விராட் அறிவித்திருந்தார். அதன்படி, நமீபியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டிதான், அவர் டி20 தொடரில் கேப்டனாக விளையாடிய கடைசி போட்டியாகும்.

அடுத்த கேப்டன்
இதையடுத்து இந்திய அணிக்கு யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்தது. நேற்று விராட் கோலி தனது பேச்சின்போது, அடுத்த கேப்டன், ரோகித் சர்மாதான் என்பதை சூசகமாக அறிவித்தார். இன்று பிசிசிஐ அறிவிப்பு அதை உறுதி செய்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்
வரும் 14ம் தேதியுடன், 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் முடிவடைய உள்ள நிலையில், நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் 20 ஓவர் போட்டி வரும் 17ம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. இரண்டாவது போட்டி 19ம் தேதி ராஞ்சியிலும் கடைசி மற்றும் இறுதி போட்டி 21ம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.

ரோகித் சர்மா கேப்டன்
நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்பது முக்கிய அறிவிப்பாகும்.

அணி விவரம்
கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், சஹல், ஆர்.அஸ்வின், அக்சர் படேல் , அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது. சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இளம் படை
நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே அரையிறுதிக்கு கூட தகுதி பெறவில்லை. இந்த நிலையில்தான் புதிதாக இளம் தலைமுறை கொண்ட ஒரு சிறப்பான அணியை உருவாக்க வேண்டிய பொறுப்பு புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா கைகளுக்கு வந்துள்ளது. அதற்கேற்ப இளம் வீரர்கள் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்க இருக்கிறது.












Click it and Unblock the Notifications