'ஹலோ வேண்டாம்' 'வந்தே மாதரம்' கூறுங்கள்.. இப்போ கட்டாயமில்லை.. மகாராஷ்டிரா அமைச்சர் திடீர் பல்டி!
மும்பை: அரசு ஊழியர்கள் செல்போனில் 'ஹலோ' என்ற வார்த்தைக்கு பதிலாக 'வந்தே மாதரம்' என கூறுவது கட்டாயமில்லை என இன்று மகாராஷ்டிரா மாநில அமைச்சர் சுதீர் முங்கண்டிவார் விளக்கம் அளித்து உள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்சிகள் நடந்தன.
இதேபோல் மாகாராஷ்டிரா மாநிலத்திலும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தின் கலாச்சார துறை அமைச்சர் சுதீர் முங்கண்டிவார் கலந்துகொண்டு பேசினார்.

'வந்தே மாதரம்' என கூறவேண்டும்
அப்போது அவர் கூறுகையில், ''இந்திய நாடு தற்போது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. சுதந்திர தின அமுத விழாவாக கொண்டாடும் இந்த நேரத்தில், வருகிற 2023ஆம் ஆண்டு ஜனவரி 26 வரை மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் செல்போனில் பேசும் போது 'ஹலோ' என்ற வார்த்தைக்கு பதிலாக 'வந்தே மாதரம்' என கூறவேண்டும்'' மேலும் அவர் கூறுகையில், '' 'வந்தே மாதரம்' என கூறும் நடைமுறையானது வருகிற 18-ந் தேதி அமலுக்கு வந்து அனைவரும் பின்பற்றவேண்டும்" என கூறியிருந்தார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
சுதந்திர தின கொண்டாட்ட விழாவில் பாஜனதா அமைச்சர் சுதீர் முங்கண்டிவாரின் இந்த பேச்சு பெரும் விவாதத்துக்குள்ளானது. இதற்கு பல்வேறு தரப்பினடும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் சுதீர் முங்கண்டிவாரின் பேச்சை கிண்டலடித்தனர். மேலும் இது தொடர்பாக அவருக்கு தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர்.

கட்டாயமில்லை
தொடர்ந்து பல்வேறு தரபினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இன்று பாஜக அமைச்சர் சுதீர் முங்கண்டிவார், ''அரசு பணியாளர்கள் செல்போன் அழைப்புகளின் போது 'வந்தே மாதரம்' என்று கூறுவது கட்டாயமில்லை" என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''தேசியவாதத்தை பிரதிபலிக்கும் எந்த நல்ல வார்த்தைகளையும், வாசகங்களையும் அரசு பணியாளர்கள் செல்போன் அழைப்பின் போது பேசலாம்" என்றார்.

அடுத்த ஆண்டு வரை தொடரும்
மேலும் அவர் கூறுகையில், '' குறிப்பாக செல்போனை அட்டன் செய்து பேசும் போது வந்தே மாதரம் என்று கூறலாம் அல்லது தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையிலான வாசகத்தையையோ, வார்த்தையையோ அரசு பணியாளர்கள் கூறலாம். இதேபோல் நான் கூறும் இந்த முறையினை ஒரு அமைப்புக்கோ அல்லது தனி நபருக்கோ எதிர்க்கும் உரிமை உண்டு. தற்போது வந்தே மாதரம் என்ற பிரச்சாரத்தை மாநில கலாச்சார துறை துவங்கி உள்ளது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வரை நடைபெறும்" என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications