பால் தாக்கரேவின் பெருமையை தக்க வைத்த உத்தவ் அணி.. மஹிமா தொகுதியில் அமித் தாக்ரேவுக்கு 3வது இடம்
மும்பை: பால் தாக்ரேவின் சிவசோனாகவாக இருந்தாலும் சரி, அவரது மருமகனான ராஜ் தாக்ரேவின் எம்என்எஸ் கட்சியாக இருந்தாலும் சரி இரண்டுக்கும் மஹிமா தொகுதி மிக முக்கியமானதாகும். எனவே இந்த தொகுதியில் யார் வெற்றி கொடி நாட்டப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. தற்போது தேர்தல் முடிவுகள் வந்திருக்கும் நிலையில், உத்தவ் அணி வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல இவரை எதிர்த்து களம் இறக்கப்பட்ட அமித் தாக்ரே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
மகாராஷ்டிராவின் அரசியல் அடையாளமாக கருதப்படும் பால் தாக்கரே, தனது சிவசேனாவை 1966ம் ஆண்டு மஹிமாவில் வைத்துதான் தொடங்கினார். அங்குள்ள சிவாஜி பார்க்கில் பேரணி பொதுக்கூட்டம் நடத்தி சிவசேனாவை தொடங்கி வைத்தார். இப்படியாக சிவசேனாவுக்கு இந்த தொகுதி மிகவும் முக்கியமானதாகும். இப்போது சிவசேனா கட்சி உத்தவ் அணி, ஷிண்டே அணி என பிரிந்து இருந்தாலும், மஹிமா தொகுதியை கைப்பற்ற இரு கட்சிகளுக்கு இடையேயும் போட்டி நிலவி வருகிறது.

இந்த போட்டியில் மூன்றாவதாக உள்ள அணி ராஜ் தாக்ரேவின் என்எம்எஸ் கட்சி. அதாவது பால் தாக்கரே சிவசேனாவை தொடங்கிய சிவாஜி பார்க் பகுதியில், சரியாக 40 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது மருமகன் ராஜ் தாக்கரே தனது என்எம்எஸ் கட்சியை தொடங்கினார். ஆக என்எம்எஸ் கட்சிக்கும் சிவாஜி பார்க் அமைந்துள்ள மஹிமா தொகுதி முக்கியமானதாகும். எனவே, இந்த தொகுதியில் வெற்றி பெற்று யார் பால் தாக்ரேவின் பாரம்பரியத்தை காப்பாற்ற போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
வேட்பாளர்களை பொறுத்தவரை என்எம்எஸ் கட்சி சார்பில் ராஜ் தாக்ரேவின் மகன் அமித் தாக்கரே களமிறங்கி இருந்தார். மாகயுதி கூட்டணி சார்பில் பாஜகவின் சதா சார்வார்க்கர் என்பவரும், மகா விகாஸ் அகாடியின் உத்தவ் அணி சார்பில் மகேஷ் ஸ்வாந்த் களமிறக்கப்பட்டார். கடந்த தேர்தல்களை வைத்து பார்க்கும்போது இந்த முறை பாஜகவின் சதா சார்வார்க்கருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டது. ஏனெனில் மஹிமா தொகுதியில் கடைசி 3 தேர்தல்களில் 2 முறை இவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆனால் கள யதார்த்தம் வேறு மாதிரியாக இருந்தது. அதாவது இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து உத்தவ் அணியின் வேட்பாளர் மகேஷ் ஸ்வாந்த் முன்னிலையில் இருந்து வந்தார். தற்போதைய நிலவரப்படி மகேஷ் 1316 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து களமிறங்கிய ஷிண்டே சிவசேனாவின் வேட்பாளர் இரண்டாவது இடத்திலும், எம்என்எஸ் கட்சியின் அமித் தாக்ரே 17151 வாக்குகள் குறைவாக பெற்று மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருக்கிறார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications