அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. அப்படி போடு.. என்னவொரு புத்திசாலித்தனம்! 2 ரூமுக்கு ஒரே ஏசி!
மும்பை: மும்பை 2 அறைக்கு ஒரே ஏசி பொருத்தி தனியார் ஓட்டல் நிர்வாகம் புத்திசாலித்தனமாக செயல்பட்டது தொடர்பான போட்டோ தற்போது இணையதளத்தில் வெளியாகி சரிப்பலையை உண்டாக்கி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் சில இடங்களில் அதிபுத்திசாலித்தனமாக சிலர் சிந்தித்து செயல்படுவார்கள். குறிப்பாக சில தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் மின்கட்டணம், தண்ணீர் சேமிப்பை கருத்தில் கொண்டு வேறலெவலில் யோசிப்பார்கள்.
இத்தகைய புதிய யோசனை பாராட்டுகளை பெற்றாலும் கூட சில சந்தர்ப்பங்களில் காமெடியாக பார்க்கப்பட்டு விமர்சனத்துக்கும் உள்ளாகிவிடும். அந்த வகையில் தான் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தனியார் ஓட்டல் நிர்வாகம் செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.
அதன் விபரம் வருமாறு:

2 அறைக்கு ஒரு ஏசி
மும்பையை சேர்ந்தவர் அனுராக் மைனஸ் வர்மா. இவர் வித்தியாசமான சிந்தனை, வித்தியாசமான யோசனை தொடர்பான போட்டோக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவர் பதிவிட்ட போட்டோ ஒன்று தற்போது இணையதளத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த போட்டோவில் இரண்டு அறைகளுக்கு பொதுவாக ஒரு ஏசி பொருத்தப்பட்டுள்ளது. அதாவது தனித்தனியாக ஏசி பொருத்தினால் செலவு அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் அறைகளுக்கு இடையேயான சுவரில் பொதுவாக இருஅறைகளுக்கும் சேர்த்து ஏசியை பொருத்தப்பட்டுள்ளது.

இப்படி இருக்கும் என நினைக்கவில்லை
தற்போது இந்த போட்டோ இணையதளத்தில் வேகமாக பரவியது. இந்த போட்டோவுக்கு அனுராக் மைனஸ் வர்மா விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, ‛‛மும்பையில் உள்ள ஓட்டலில் கடந்த 2011ல் தங்கினேன். ஏசி அறை கேட்டேன். அப்போது ஏற்பாடு செய்தவதாக தெரிவித்தனர். ஏசி அறையை பிரித்து தருவதாக கூறினார்கள். இதுபோன்று வித்தியாசமானதாக இருக்கும் என நினைக்கவில்லை'' என கூறியிருந்தார்.

2 அறை பயன்பாடு
மேலும், ‛‛இரண்டு அறைகளுக்கு பொதுவாக ஏசி பொருத்தப்பட்டு இருந்தது. ஏசியில் பாதியளவு எனது அறைக்கும், இன்னொரு பாதி பக்கத்து அறைக்கும் பயன்பட்டது. ஏசி பங்கீட்டு கொள்ளும் மற்றொரு அறையில் 2 பேர் காலை 4 மணிவரை ஆய் கன்பத் சல் தாரு லா பாடலை பாடி கொண்டிருந்தனர்'' என வேடிக்கையாக கூறியுள்ளார். இருப்பினும் இந்த ஓட்டலின் பெயர், அதன் முழு முகவரியை அவர் வெளியிடவில்லை.

நெட்டிசன்கள் கருத்துடன் பகிர்வு
அனுராக் மைனஸ் சர்மாவின் இந்த போட்டோவை தற்போது பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், நெட்டிசன்கள் தங்களது வாழ்க்கையில் இதேபோன்று அதிபுத்திசாலித்தனமான சிலர் யோசித்து அரங்கேற்றிய செயல்கள் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர். பலர் புதுமையான யோசனை தான் எனவும், உலகில் உள்ள அறிவாளிகள் அனைவரும் இந்தியாவில் தான் உள்ளனர் எனவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications